கொல்கத்தா: கொல்கத்தாவில் நவம்பர் 28 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் ஐஎஸ்எல் கால்பந்து போட்டி 0 - 0 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 42 ஆவது கால்பந்து போட்டி கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுப பாரதி கிரிரங்கன் மைதானத்தில் ஏடிகே அணிக்கும், எஃப்சி கோவா அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது.
டாஸ் வென்ற கோவா அணி வலது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணிகளும் விறுவிறுப்பாக விளையாடின. ஆட்டத்தின் 27 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணிக்கு கோல் அடிக்க சரியான வாய்ப்பு கிடைத்தது. அது நழுவிப்போனது.
ஆஸி. டெஸ்ட் தொடருக்கு முன் இந்தியாவை பயமுறுத்தும் டெஸ்ட் வீரர்கள் தரவரிசை
இதையடுத்து ஆட்டத்தின் 32 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் புரோனே ஹால்டருக்கும் ஆண்ரே பிக்கிக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 40 நிமிடங்களுக்கு மேலாக இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை என்பதால் அவர்கள் கோல் அடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த 4 நிமிடங்களிலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் ஆட்டத்தின் முதல் பாதி வரை 0 - 0 என் கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆட்டத்தின் 57 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஜாக்கி சந்த் வெளியேற்றப்பட்டு மன்வீர்சிங் களம் இறங்கினார்.
இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த 5 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து கொல்கத்தா - கோவா இடையே நடைபெற்ற கால்பந்து போட்டி 0 - 0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
(Photos Courtesy - ISL)