சென்னை : உயர, உயர செல்வது என்பது இலகுவான ஒன்று ஆனால் அந்த உயரத்திலேயே நிற்பது என்பது மிகவும் கடினம். கடந்த சீசனில் சாம்ப்பியன் பட்டத்தை வென்ற சென்னையின் எஃப்சி அணி தற்போது அதை உணர்ந்திருக்கிறது. ஏனென்றால் மற்ற அணிகளை விட சென்னை பின்தங்கி இருக்கிறது. தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியுமா என்ற அபாய கட்டத்தில் உள்ளது.
தற்போது தெற்கு பகுதியைச் சேர்ந்த கேரளா அணியுடன் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை நடைபெற உள்ள போட்டியில் மிகக் கடுமையாக போராட வேண்டிய கட்டாய நிலைக்கு சென்னை அணி தள்ளப்பட்டுள்ளது.
எட்டு போட்டிகளில் விளையாடிய சென்னை அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. தற்போது ஒன்பதாவது போட்டியில் கேரள பிளாஸ்டர்ஸ் அணியை ஜெயித்தால் மட்டுமே இந்த ஜான் கிரிகோரியின் ஆட்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும்.
கடந்த சீசனின் இறுதிப் போட்டியில் இந்த மெரீனா மச்சான்கள், பெங்களூரு அணியைத் திகைக்க வைத்தனர். துணிச்சல் மிக்க இந்த அணி தற்போது உறுதியற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சென்னை அணியில் கடந்த சீசனில் ஏழு கோல்கள் அடித்த ஜெஜே லால்பெக்ளவா தற்போது இன்னும் தனது கணக்கைத் தொடங்வில்லை. அப்படியானால், சென்னை அணி முடிவை எடுப்பது எப்படி?
இது குறித்து கருத்துத் தெரிவித்த சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி, நாளைய ஆட்டத்தில் மூன்று கோல்களை அடிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இந்த ஆட்டத்தின் முக்கியத்துவத்தை எங்கள் அணி வீரர்களும் ரசிகர்களும் உணர்ந்துள்ளனர். தற்போது ஒரு வெற்றி என்பது மிகவும் முக்கியம். அதை நோக்கி எங்கள் அணி சென்று கொண்டிருக்கிறது என்றார்.
இந்த தோல்விக்கு காரணம் தனிப்பட்ட வீரர்களின் பிழை அல்ல என்று தெரிவித்துள்ள கிரிகோரி, நாளை விளையாடில் நம்பகத் தன்மையுடன் அவர்கள் விளையாட வேண்டும் என்கிறார்.
கடந்த ஆண்டு அனைத்து வீரர்களும் நம்பகத் தன்மையுடன் விளையாடினர். ஆனால் இந்த சீசனில் பிழைகள் செய்யக்கூடாது என்று எதிர்பார்க்கும் வீரர்கள் தவறுகளை செய்து விடுவதாக தெரிவித்தார் கிரிகோரி.
கேரளா பிளாஸ்டர்ஸ் அணியைப் பொறுத்தவரை இந்த சீசன் அவர்களுக்கும் பிரமாதமானதாக இல்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் அவர்கள் முதல் போட்டியில் ஏடிகே அணியை ஜெயித்தனர். அதன்பிறகு அவர்கள் வெறும் ஏழு புள்ளிகளைப் பெற்று ஏழாவது இடத்தில் உள்ளனர்.
இந்த மஞ்சள் படையானது கடந்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் அணியுடன் விளையாடிய போது 1 - 2 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. ஒவ்வொரு விதத்திலும் இந்த அணிக்கு உள்ள பிரச்சனை குறித்து பார்க்கிறேன், குறிப்பாக கடைசி நேர விளையாட்டு இதில் முக்கியமான ஒன்று என்கிறார் அதன் பயிற்சியாளர்.
நார்த் ஈஸ்ட் அணிக்கு எதிரான போட்டியின்போது சந்தேஷ் ஜிங்கனுக்கு கடைசி 90 ஆவது நிமிடத்தில் பெனால்டி வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் எங்கள் திசையை நோக்கி செல்ல எங்களால் முடிவு எடுக்க முடியவிலலை என்கிறார் இங்கிலாந்தின் முன்னாள் கோல் கீப்பர்.
மற்றுமொரு வெற்றியை எட்ட வேண்டும் என்று கேரள அணி முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் சென்னை அணி அவர்களது வெற்றியைத் தடுக்க பெரு முயற்சி செய்யும். இந்த ஆட்டத்தைப் பொறுத்த வரை சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும் என நாம் கருதலாம்.
(Photos Courtesy - ISL)