
சென்னை : மிக மோசமான புள்ளிகளுடன் அட்டவணையில் பின் தங்கி இருக்கும் சென்னையின் எஃப்சி அணி, நாளை மும்பை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணிக்கு எதிராக விளையாடும்போது 3 புள்ளிகளை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று அதன் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி இலக்கு நிர்ணயித்துள்ளார்.
5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, நாளை நடைபெறும் போட்டியில் வலுவாக செயல்பட வேண்டிய பொறுப்பு உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சென்னை அணியின் துணை பயிற்சியாளர் சபீர் பாஷா, சென்னை அணிக்கு எதிராக விமர்சனம் செய்பவர்களை பயிற்சியாளர் கிரிகோரி கடுமையாக எச்சரித்தார்.
மெரீனா மச்சான்ஸ், தற்போது அட்டவணையில் கீழே இருந்தாலும், மார்கோ மடராஸியின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு 2015 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது போல் தற்போதும் முன்னேறும் என நம்பிக்கை தெரிவித்தார். கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டதைப் போல் தற்போதும் விளையாட நினைக்கிறோம். ஆனால் அது நழுவிப் போகிறது என்கிறார் சபிர் பாஷா.
மார்கோ தலைமையில் 2105 ஆம் ஆண்டு விளையாடியபோது, அட்டவணையில் கடைசியில் தான் இருந்தோம் ஆனால் இறுதியில் சாம்பியன் பட்டத்தை வென்றோம். அதனால் எங்களை கடுமையாக விமர்சனம் செய்வதை விட்டுவிடுங்கள். ஏனென்றால் தற்போதும் நாங்கள் தான் சாம்பியன்கள். நிச்சயமாக அந்த பட்டத்தை வெல்வோம் என்கிறார் பாஷா.
மும்பை சிட்டி அணியைப் பாருங்கள் அவர்களும் எங்களைப் போல் தான் இருக்கிறார்கள். ஏடிகே அணிக்கு எதிராக நாங்கள் விளையாடியதைப் போலத்தான் கோவா அணிக்கு எதிராக மும்பை சிட்டி அணியினர் விளையாடுகின்றனர். அதனால் நாளைய போட்டியில் நாங்கள் ஜெயிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கிறார் பாஷா.
கடந்த 4 ஆண்டுகளாக அவர்களது அணியில் இருந்த நட்சத்திர வீரரான ஜெஜே லால்பெக்ளவா,தற்போது இல்லை. அதே போல் கார்லோஸ் சலோம் இன்னும் ஜொலிக்கவில்லை என்கிறார் பாஷா.
நாளை நடைபெறவுள்ள போட்டியில் மூன்று புள்ளிகளை சென்னை அணி எடுக்கும்போது அட்டவணையில் மற்ற அணிகளுக்கு இடையேயான இடைவெளி குறையும் என்கிறார் பாஷா.
மும்பை சிட்டி அணியைப் பொறுத்தவரை முந்தைய ஆட்டத்தில கோவா அணியை 2- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அந்த அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா, ஒரு நிலைத் தன்மையுடன் ஆட மும்பை அணி தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கோவா அணியுடன் விளையாடும்போது சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தோம். ஆனால் 20 - 25 நிமிடங்களில் ஆட்டம் சிறப்பானதாக இல்லை. அதன் பிறகு மீண்டும் எங்கள் வீரர்கள் நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தற்போது எங்கள் அணிக்கு சில நுணுக்கங்களை கற்றத் தரவேண்டும். தனித்தனியாக சிறப்பாக விளையாடி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்கிறார் கோஸ்டா.
2015 சீசனில் மும்பை அணியை எதிர்த்து விளையாடி சென்னை அணி தோல்வி அடைந்தது ஆனால் இறுதியில் சாம்பியன் பட்டத்தைவென்றது. அதே நேரத்தில் சென்னை அணியின் வெற்றியை தட்டிப் பறிக்க மும்பை அணியும் தயாராக உள்ளது.