மும்பை : நார்த் ஈஸ்ட் அணியின் பெரும்பாலான ரசிகர்கள் அதன் வெற்றியைக் கொண்டாடும் மன நிலையில் இல்லை. ஏனென்றால் உள்ளூரில் அவர்களின் ஆட்டத்தைத் ரசிகர்கள் மகிழ்ச்சியாக ரசித்தனர். ஆனால் பிளே - ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் ஆட்டங்களில் நார்த் ஈஸ்ட் அணியின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள நார்த் ஈஸ்ட் அணி, இதற்கு முந்தைய ஆட்டங்களில் விளையாடியதைத் போல் சிறப்பாக விளையாடவில்லை என ரசிகர்கள் நினைக்கின்றனர். சற்று நன்கு கவனித்துப் பார்த்தோம் என்றால் பல வெற்றிகளை நார்த் ஈஸ்ட் அணி தவறவிட்டுள்ளது. தற்போது உள்ள அட்டவணையில் இந்த அணி 5 ஆவது இடத்தில் உள்ளது, ஆனால் இந்த அட்டவணையில் முதல் இடத்தில் உள்ள எஃப்சி கோவா அணியை விட 5 புள்ளிகளே குறைவாகப் பெற்றுள்ளது.
அப்படி இருந்தும் நார்த் ஈஸ்ட் அணி ரசிகர்கள் இதனை ஏன் கொண்டாடவில்லை ?
இதற்கு முன்னும் இப்படி ஒரு சூழ்நிலையில் இருந்தது. உதாரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டில், எமிலியோ அல்ஃபரோவின் அற்புதமான ஆட்டத்தால் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி , முதல் ஐந்து போட்டிகளில் 10 புள்ளிகளைப் பெற்றது, ஆனால் அதன் பின்னர் நடந்த நான்கு போட்டிகளில் தோல்வியடைந்தது.
ஆனால் சற்று தாமதமாக நார்த் ஈஸ்ட் அணியில் ஒரு எழுச்சி ஏற்பட்டது. ஆனால் இறுதி லீக் மோதலில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் தோற்றது. அதில் 2 புள்ளிகள் குறைவாக பெற்றதால் , இறுதிப் போட்டிக்கு ஏடிகே அணி தகுதி பெற்று சாம்ப்பியன் பட்டத்தை அந்த அணி வென்றது.
ஆனால் இந்த சீசனில் ஒரு வித்தியாசம் தெரிகிறது. ஏனென்றால் நார்த் ஈஸ்ட் அணியின் பயிற்சியாளர் எல்கோ ஷாட்டோரியின் செல்வாக்கு இப்போது பரவி வருகிறது. மேலும் அந்த அணியின் உரிமையாளர் நடிகர் ஜான் ஆப்ரஹாம் ஆட்டத்தின் போது மைதானத்தைச் சுற்றி, சுற்றி வந்து வீரர்களை உற்சாகப்படுத்துகிறார்.
ஏற்கனவே அந்த அணியின் மேலாளர்கள் நல்ல பயிற்சி கொடுத்துள்ளனர். அதனால் எங்கள் அணி வீரர்கள் நன்றாக விளையாடுவார்கள் என பயிற்சியாளர் எல்கோ ஷாட்டோரி தெரிவித்துள்ளார்.
இந்த லீக்கின் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ள பர்த்தலோமிவ் ஆக்பேச்சி விளையாடுவது இந்த அணிக்கு மேலும் வலு சேர்க்கும். அந்த அணி அடித்த 10 கோல்களில் 6 கோல்களை அடித்துள்ளார் அந்த 34 வயது வீரர்.
நார்த் ஈஸ்ட் அணி வீரர்கள் தடுப்பாட்டத்தில் வல்லவர்கள். பெங்களூரு அணிக்கு எதிராக அவர்கள் ஆடிய ஆட்டம் இதனை உறுதிப்படுத்தியது.
எல்கோ ஷாட்டோரி தனது அணி வீரர்களின் திறமைகளையும், மாற்று வீரர்களின் திறமைகளையும் வெளிக் கொண்டு வருவதில் சிறப்பாக செயல்படுகிறார். அதே நேரத்தில் நார்த் ஈஸ்ட் அணி 4-2-3-1 மற்றும் 4-4-2 என்ற இடைவெளியில் தனது புள்ளிகளை வைத்துள்ளது.
அடுத்து வரும் போட்டிகளில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி அதன் ரசிகர்களுக்கு ஒரு தெளிவான வெற்றிப் பார்வையை அளிக்க வேண்டும். தொடக்கத்தில் அந்த அணியினரின் வெற்றிக்கு ரசிகர்கள் காத்திருந்தது போல இனிமேல் காத்திருக்காமல் வெற்றியை கொடுக்க வேண்டும். கண்டிப்பாக அப்படி ஒரு வெற்றிக் கொண்டாட்டம் நார்த் ஈஸ்ட் அணி ரசிகர்களுக்கு கிடைக்கும் என நம்பலாம்.
(Photos Courtesy - ISL)