கோவா : ஐஎஸ்எல் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கோவா அணி 3 கோல்கள் அடித்து சென்னை அணியை வீழ்த்தியது. கோவா அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
6ஆவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் கோவாவில் உள்ள ஜவஹர்லால் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் எஃப்சி கோவா மற்றும் சென்னையின் எஃப்சி அணிகள் மோதின.
டாஸ் வென்ற எஃப்சி கோவா அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. தொடக்கம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. ஆட்டத்தின் 12 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ரோட்ரிகஸ்க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
ஆட்டத்தின் 20 ஆவது நிமிடத்தில் கோவா அணிக்கு கோல் அடிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சென்னை அணியினர் அதை லாவகமாக தடுத்தனர்.
இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் லென் டாங்கல் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதனைத் தொடர்ந்து இரு அணிகளுமே அடுத்த கோலை அடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டன. ஆனால் 45 ஆவது நிமிடம் வரை இரு அணிகளுமே அடுத்த கோலை அடிக்கவில்லை.
இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பகுதி தொடங்கியது. 46 ஆவது நிமிடத்தில் சென்னை அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து 62 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் கோரா ஒரு கோல் அடித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து 63 ஆவது நிமிடத்தில் மீண்டும் சென்னை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 81 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் பென்னா அற்புதமாக ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து 87 மற்றும் 89 ஆவது நிமிடங்களில் கோவா அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
வீரர்கள் ஸ்ட்ரைக்.. சரண்டர் ஆன கிரிக்கெட் போர்டு! இந்தியாவை வைத்து காரியம் சாதித்த வங்கதேச வீரர்கள்!
இதனையடுத்து கூடுதலாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த மூன்று நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டம் முடித்து வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோவா அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது