இரண்டாம் பாதியில் கோல்
79-வது நிமிடத்தில் கவுகாத்தி அணி கோல் அடித்தது. புனே அணி பின்கள வீரர்களுக்கு நேக்காக, போக்கு காட்டி கவுகாத்தி வீரர் ஆல்பரோ நேர்த்தியாக இந்த கோலை அடித்தார்.
வாய்ப்பு வீண்
புனே அணிக்கு கடைசி நேரத்தில் கிடைத்த 'பிரிகிக்' வாய்ப்பையும் அந்த அணியால் கோலாக்க முடியவில்லை. முடிவில் கவுகாத்தி அணி 1-0 என்ற கோல் கணக்கில் புனேயை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்ததுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. 3வது ஆட்டத்தில் ஆடிய புனே அணி சந்தித்த 2வது தோல்வி இதுவாகும்.
சிவப்பு அட்டை
36வது நிமிடத்தில் புனே அணி வீரர் அனிபால் மீது மோதிய கவுகாத்தி அணி வீரர் நிர்மல் சேத்ரி நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் கவுகாத்தி அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டியதானது. இந்த வாய்ப்பை புனே அணி சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.
மஞ்சள் கார்டு
அதேநேரம், 71வது நிமிடத்தில் புனே அணி வீரர் எட்வர்டோ முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதால் இரண்டாவது முறையாக மஞ்சள் அட்டை பெற்று வெளியேறினார். அதன் பிறகு புனே அணியும் 10 வீரர்களுடன் விளையாடியது.