லண்டன் : பிளைமவுத் அணி 2 - 2 என்ற கோல் கணக்கில் கோவென்ட்ரி அணியுடன் டிரா செய்தது. அதைத் தொடர்ந்து பிளைமவுத் பயிற்சியாளர் இயன் ஃபோஸ்டர் தனது ஏமாற்றத்தைப் பற்றி பேசினார்.
போட்டி நேரம் முடிந்த பின், கூடுதல் நேரத்தின் ஆறாவது நிமிடத்தில் விக்டர் டார்ப்பின் ஃப்ரீ-கிக்கில் கோலைப் பெற லியாம் கிச்சிங் கடைசியாக கோல் அடித்தார். இது அந்த அணிக்கு போட்டியை டிரா செய்ய உதவியது.
மோர்கன் விட்டேக்கர் மற்றும் மைக்கேல் மில்லர் பிளைமவுத்துக்காக கோல் அடித்தனர். கோவென்ட்ரி அணிக்காக எல்லிஸ் சிம்ஸ் ஒரு கோல் அடித்தார். அதன் பின் கூடுதல் நேரத்தில் ஒரு கோல் அடித்து பிளைமவுத் வெற்றியை தடுத்தது கோவென்ட்ரி.

இது பற்றி பிளைமவுத் அணியின் பயிற்சியாளர் ஃபாஸ்டர் கூறுகையில், "நாங்கள் வெற்றிபெறும்போது மிகவும் உற்சாகமாகவோ அல்லது தோல்வியடையும் போது மிகவும் ஏமாற்றமடையவோ இல்லை. இன்றிரவு கடினமானது. இது ஒரு தோல்வி போல் உணர்கிறது, இது புள்ளிப் பட்டியலில் நாம் இருக்க விரும்பும் இடத்திற்கு செல்ல ஒரு புள்ளியை குறைத்து இருக்கிறது. குறிப்பாக போட்டி முடிந்த பிறகு, நீங்கள் எப்போதும் மிகவும் உணர்ச்சிவசப்படும் அபாயத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன்." என்றார்.
மேலும், "(கடைசி) கோல் அடிக்கப்பட்ட முறையில் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம், அதனால் மூன்று புள்ளிகளும் எங்களுக்கு கிடைக்காமல் போய் விட்டது. இந்தப் போட்டியில் இருந்து உணர்ச்சிகளை எடுத்து விட்டு பார்த்தால், நாங்கள் எப்படி விளையாடினோம் என்பதை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். 97 நிமிடம் வரை போட்டி நடந்ததால் நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்தோம். ஆனால் நாங்கள் எவ்வளவு தைரியமாக இருந்தோம் என்பதிலும், எங்கள் பிரிவில் ஒரு சிறந்த அணிக்கு எதிராக நாங்கள் எவ்வாறு செயல்பட்டோம் என்பதிலும் மகிழ்ச்சியடைகிறோம்." என்றார்.
"எங்கள் அணி இருக்கும் பிரிவில் நீங்கள் தவறு செய்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்பதை மீண்டும் கண்டுபிடித்தோம்." என வெற்றி பெற வேண்டிய போட்டியை டிரா செய்தது குறித்து குறிப்பிட்டார் பயிற்சியாளர் இயன் ஃபோஸ்டர்.