
கலக்கும் வீடியோ
சர்ச்சைகளும், சங்கடங்களும் கடைசி போட்டியில் ரவுண்டு கட்டி அடிக்கும். அது போன்றதொரு போட்டி தற்போது வினையாகி இருக்கிறது. அதுவும் கால்பந்து போட்டி ஒன்றில். இங்கல்ல... இத்தாலியில்.

கடைசி போட்டியில் விளையாடினார்
இத்தாலியில் உள்ளூர் கால்பந்து போட்டிகளில் மிகவும் பிரபலமான வீரர் இக்னேஸியோ பார்பகால்லோ (55). அவர் தனது கடைசி போட்டியை சொந்த மைதானத்தில் விளையாட தொடங்கினார்.
வந்தது ஹெலிகாப்டர்
சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் ஒன்று புழுதியைக் கிளப்பிக்கொண்டு நடு மைதானத்தில் தரையிறங்கியது. அதில் இருந்து வெளியே வந்த மர்ம நபர்கள் சிலர், துப்பாக்கி முனையில் இக்னேஸியோவை கடத்தினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

துப்பாக்கி முனையில் கடத்தல்
அவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட அந்த செய்தி உலகளவில் பரபரப்பானது. அதுவும் மைதானத்துக்குள் ஹெலிகாப்டரில் வந்து கடத்திச் சென்றனரா என்று அதிர்ச்சி அடைந்தனர்.

இணையத்தில் வைரல்
இது தொடர்பான வீடியோவும் இணையத்தை கலக்கியது. பின்னர்தான் தெரிந்தது இது சும்மா ஜாலிக்காக எடுக்கப்பட்ட பிராங்க் வீடியோ என்று. அதனை அறிந்த போட்டி நிர்வாகம், அவரது அணியை இடைநீக்கம் செய்தது.

அபராதம் விதிப்பு
விளையாட்டுக்கும், தமாசுக்கும் பண்ணியதாக அவர் கூற, அபராதமும் விதிக்கப்பட்டது. அவரின் இந்த கோமாளித்தனமான இந்த நடவடிக்கையால் அந்த போட்டி யாராலும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது.


Click it and Unblock the Notifications













