FA Cup Final 2019:வாட்போர்டு அணி துவம்சம் செய்த மான்செஸ்டர் சிட்டி... 6-0 என்று வீழ்த்தி சாம்பியன்
லண்டன்:லண்டனில் நடைபெற்ற எப்ஏ கால்பந்து கோப்பைக்கான இறுதி போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி அபாரமாக வெற்றிபெற்றது.
உலக கால்பந்து ரசிகர்களின் முக்கியமான போட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது எப்ஏ கோப்பை. நடப்பாண்டில் இந்த தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணியும், வாட்போர்டு அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
லண்டனின் வெம்ப்லே மைதானத்தில் எப்ஏ கோப்பைக்கான இறுதி போட்டி நடைபெற்றது. ஆட்டம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்றது. தொடக்கம் முதலே இரு அணிகளும் கோலடிக்க முயற்சிகள் மேற்கொண்டன.
முதல் பாதி ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் திருப்பம் ஏற்பட்டது. முதல் கோல் அடித்து மான்செஸ்டர் அணி முன்னிலை பெற்று தந்தார் சில்வா. அதற்கு பதில் கோல் அடிக்க முயன்ற வாட்போர்டு அணியின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 38வது நிமிடத்தில் மற்றொரு கோலை அடித்தது மான்செஸ்டர் சிட்டி.
ஒரு பொண்ணை லவ் பண்றேன்...! அவரை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்..! ஷாக் கிளப்பிய இந்திய தடகள வீராங்கனை
2க்கு பூஜ்யம் என்று பின்தங்கியிருந்த வாட்போர்டு முதல் கோல் அடிக்க முயன்றும் முடியவில்லை. 2வது பாதியில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தியது மான்செஸ்டர் சிட்டி அணி. 61வது நிமிடத்திலும், 68வது நிமிடத்திலும் கோல். என்ன நடக்கிறது என்றே தெரியாமல் வாட்போர்டு அணி திணறியது.
அதன்பிறகும், கோல் மழை நிற்கவில்லை. 81 மற்றும் 87வது நிமிடங்களில் ஸ்டெர்லிங் கோல்கள் அடித்து அசத்தினார். முடிவில் 6க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் அணி எப்ஏ கோப்பையை தட்டிச்சென்றது.