கோல் இல்லாத முதல் பாதி
இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் திணறிய நிலையில், 41வது நிமிடத்தில் செனகல் அணிக்கு கோல் அடிக்க முயற்சியை, நெதர்லாந்து அணியின் முக்கிய வீரரான வின்சென்ட் ஜான்சன் தடுத்து நிறுத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் எதுவும் அடிக்கப்படாமலேயே முடிவுக்கு வந்தது.
பறிபோன கோல் வாய்ப்பு
பின்னர் இரண்டாம் பாதி தொடக்கம் முதலே யார் முதல் கோலை அடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதற்கு ஏற்ப 53வது நிமிடத்தில் நெதர்லாந்து அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை நெதர்லாந்து அணியின் வான் டிஜிக் சரியான நேரத்தில் ஹெட்டர் அடிக்காததால் கோல் வாய்ப்பு பறிபோனது.
அசந்த நேரத்தில் கோல்
இதன்பின்னர் இரு அணி வீரர்கள் தொடர்ந்து கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக சென்றது. இந்த நிலையில் 84வது நிமிடத்தில் செனகல் கோல் கீப்பர் சற்று அசந்த நேரத்தில், திடீரென ஹெட்டர் மூலம் நெதர்லாந்து அணி கேக்போல் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் நெதர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
கடைசி நிமிட கோல்
90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில், 8 நிமிடங்கள் கூடுதலாக நேரம் வழங்கப்பட்டது. அதில் செனகல் அணியின் வீரர்கள் கோல் அடிக்க ஆக்ரோஷமான முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் செனகல் அணியின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. ஆனால் கடைசி நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் டேவி கிளாஸன் அந்த அணிக்காக 2வது கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தியது.