தவறாகப் பேசினால் வருத்தம்
மிக நீண்ட அந்த பதிவில் உள்ள சில முக்கிய குறிப்புகளாக, "ஒரு தாயாக, மற்ற பெற்றோர்களும் கூட, யாரேனும் தங்கள் குழந்தைகளைப் பற்றி மோசமாக பேசினால் வருத்தமடைகிறோம். அதிலும், அவர்களைப் பற்றி தெரியாமலேயே விமர்சனம் செய்யும் போது, மேலும் வருத்தமடைகிறேன். மக்களுக்கு நெய்மரின் பெயர் மட்டுமே தெரியும். ஆனால், ஒரு மனிதராக அவர் யாரென்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்" என கூறியுள்ளார்.
மிகப் பெரிய ஆர்வலர்
அதே பதிவின் இறுதியில், "நான் உனது மிகப்பெரிய ஆர்வலர். மற்றவர் மீது அன்பு செலுத்தாதவர்களின் வார்த்தைகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் வருந்தாதே! உன் மீது அன்பு செலுத்துபவர்களோடு ஒப்பிட்டால் அவர்கள் குறைவானவர்களே! குறிப்பாக, தங்கள் மனசாட்சியை அறிந்தவர்களோடு ஒப்பிட்டால்...நான் எப்பொழுதும் உன்னுடன் இருப்பேன் மகனே...என் வீரனே!!" என எழுதியுள்ளார்.
கீழே விழுந்து துடித்தது
ரஷ்யாவில் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில், நெய்மர் சிறிய காயங்களுக்கும், தானே கீழே விழுந்துவிட்டு அதிகம் வலிப்பது போல புரண்டு, புரண்டு செய்த செயல்கள் பெரும் விமர்சனத்துக்கும், கேலிக்கும் உள்ளானது. உலகம் முழுவதும் மீம்ஸ் மற்றும் சமூக வலைதளங்களின் நகைச்சுவை நாயகனாக மாறினார், நெய்மர்.
உண்மையான காயங்கள்தான்
உலகக்கோப்பையில் பிரேசில் அணியின் தோல்விக்கு எந்த விளக்கமும் அளிக்காமல் அமைதியாக இருந்ததும், பிரேசில் நாட்டில் சர்ச்சைக்குள்ளானது. இதற்கும், களத்தில் தன் நாடகத்தனமான செயல்பாடுகளுக்கும் பதில் அளிக்கும் விதமாக விளம்பரத்தில் பேசினார் நெய்மர். அதில் சில முறை தான் அதிகப்படியான செய்கைகளில் ஈடுபட்டாலும், தான் உண்மையாகவே களத்தில் காயமுற்றதாக தெரிவித்துள்ளார். தன் நாட்டு மக்களுக்கு தோல்வியின் காரணத்தால் ஏற்படும் ஏமாற்றத்தை வழங்க முடியாமலேயே, தான் அமைதியாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.