பெப் கார்டியோலா தனது மான்செஸ்டர் சிட்டி அணி பிரீமியர் லீக்கின் முதலிடத்திற்குத் திரும்பும் என்ற பேச்சை நிராகரித்தார். மோசமாக ஆடி வரும் எவர்டன் அணிக்கு எதிரான போட்டியில் மான்செஸ்டர் சிட்டி பங்கேற்க உள்ள நிலையில் இந்த பேச்சு கிளம்பி இருக்கிறது.
எதிஹாட் ஸ்டேடியத்தில் சனிக்கிழமை மதிய உணவு நேர சந்திப்பில் நடக்க உள்ள இந்தப் போட்டியில் வென்றால் - குறைந்தது சில மணிநேரங்களுக்கு மட்டும் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கலாம்.
கடந்த சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிராக எவர்டன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. அதனால் மான்செஸ்டர் சிட்டி பயிற்சியாளர் பெப் கார்டியோலா இந்தப் போட்டியை எளிதான ஒன்றாக எடுத்துக் கொள்ளவில்லை.
இது பற்றி கார்டியோலா கூறுகையில், "பல ஆண்டுகளாக நாங்கள் செய்ததைப் போலவே நாங்கள் தொடர வேண்டும். எங்கள் போட்டி முடிவுகள் நன்றாக இல்லாதபோது, எங்கள் ஆட்டம் நன்றாகவே இருந்தது, நாங்கள் நன்றாக விளையாடுகிறோம் என்று அப்போது சொன்னேன்."
"இது எல்லா சீசனிலும் ஒரே மாதிரியாக இருந்தது, ஆனால் நாளை நாங்கள் எழுந்து நேரடியாக 12.30 மணிக்கு கால்பந்து போட்டியில் விளையாடுவோம். எனவே நாங்கள் தயாராக இருக்க வேண்டும். இந்த முறை நன்றாகவே ஆடுவோம். ஆனால், கடந்த முறை எங்களால் வெல்ல முடியவில்லை"
"எவர்டன் எப்போதும் இங்கே நல்ல போட்டி முடிவுகளை சந்தித்து இருக்கிறது. ஏன் என்று எனக்குத் தெரியவில்லை - ஒருவேளை அவர்கள் நல்ல அணி என்பதால் இருக்கலாம். எனவே நாம் தயாராக இருக்க வேண்டும்."
எவர்டன் கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து பிரீமியர் லீக்கில் இதுவரை வெற்றி பெறவில்லை, மேலும் நிதி விதிமுறைகளை மீறியதற்காக 10 புள்ளிகள் கழிக்கப்பட்டதால், தொடரில் இருந்து வெளியேற்றப்படும் மண்டலத்தில் உள்ளது.

எவர்டன் மேலும் தண்டனையைக் தரக்கூடிய மற்றொரு குற்றச்சாட்டை சந்தித்துள்ளது. அந்த அணியின் உரிமையாளர் சீன் டைச் ஏன் தனது கிளப்பின் வழக்குகளுக்கு மட்டும் மான்செஸ்டர் சிட்டியை விட விரைவாக தீர்ப்பு அளிக்கப்பட்டது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
12 மாதங்களுக்கு முன்பு 115 விதிமுறைகளை மீறியதாக மான்செஸ்டர் சிட்டி மீது குற்றம் சாட்டப்பட்டது, ஆனால் அவர்களின் வழக்கு இன்னும் விசாரிக்கப்பட உள்ளது.
கார்டியோலா தனது போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பை வெள்ளிக்கிழமை நடத்தியதால் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை.
"அதைப் பற்றிய எனது கருத்து எனக்குத் தெரியும். பலமுறை பேசியிருக்கிறேன். அது குறித்து வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. நாங்கள் காத்திருக்கிறோம்." என்றார் கார்டியோலா.