
அகதிகள் அந்தஸ்து
அங்குள்ள கிளப் அணிகள் சார்பில் கால்பந்து போட்டிகளில் பங்கேற்று வந்த அவருக்கு 2017ம் ஆண்டு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டது. நாட்டைவிட்டு வெளியேறிய அல் அரைபியை பிடிக்குமாறு பக்ரைன் அரசு சர்வதேச போலீசாருக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

தாய்லாந்தில் தேனிலவு
இந்நிலையில், 2018ம் ஆண்டு தனது மனைவியுடன் தேனிலவுக்காக தாய்லாந்து சென்றை அல்-அரபியை பாங்காக்கில் வைத்து சர்வதேச போலீசார் கைது செய்தனர்.

சிறை, விடுதலை
பின்னர் அங்கு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரை விடுதலை செய்யும்படி பல்வேறு தரப்பினரும் முயற்சிகள் மேற்கொண்டதை அடுத்து, அவர் விடுவிக்கப்பட்டார்.

ஆஸி.குடியுரிமை
இந்நிலையில், ஆஸ்திரேலிய அரசு அவருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. மெல்போர்ன் நகரில் நடைபெற்ற விழாவில், அல் அரைபி உட்பட 44 நாடுகளைச் சேர்ந்த 200 அகதிகளுக்கு ஆஸ்திரேலிய அரசு குடியுரிமை வழங்கி உள்ளது.

பாதுகாப்பான உணர்வு
இதுகுறித்து அல் அரைபி கூறியதாவது: இப்போது முதல் தான் ஒரு ஆஸ்திரேலியர் என்று உணர்கிறேன். மேலும், தான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வதாகவும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications













