
ரொனால்டோ பேட்டி
இதனிடையே பியர்ஸ் மோர்கனுக்கு அளித்த நேர்காணலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அதில், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளரான எரிக் டென் ஏன் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார் என எனக்கு தெரியவில்லை. அவர் எனக்கு உரிய மரியாதையை வழங்குவதில்லை. எனவே, அவருக்கு மரியாதை தர நானும் விரும்பவில்லை. பலருக்கு நான் இந்த அணியில் இருப்பது பிடிக்கவில்லை என்று தெரிவித்தார்.

மான்செஸ்டர் யுனைடெட் அறிவிப்பு
இதுமட்டுமல்லாமல், மான்செஸ்டர் அணியின் உரிமையாளர்கள் அணியின் வளர்ச்சி குறித்தோ, விளையாட்டை குறித்தோ கவலைப்படவில்லை. அணிக்கு கிடைத்த புகழை வைத்து பணம் சம்பாதிப்பதே உரிமையாளர்களின் குறிக்கோளாக உள்ளது என குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப்பை விட்டு வெளியேறுவதாக மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் அறிவித்தது.

சவுதி அரேபியா கிளப்
இதனால் ரொனால்டோ அடுத்ததாக எந்த கிளப்பில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. இந்த நிலையில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த AL NASSR என்ற கிளப் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய 200 மில்லியன் யூரோ வழங்க முன் வந்துள்ளது.

ரூ.1,687 கோடி ஒப்பந்தம்?
ஒரு சீசனுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,687 கோடி வழங்க முன்வந்துள்ளது. சுமார் 2.5 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியா அணியின் ஆஃபரை ரொனால்டோ ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் நட்சத்திர வீரர்கள் ஐரோப்பிய லீக் போட்டிகளில் விளையாடுவதிலேயே அதிக ஆர்வம் காட்டுவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

