
முதல் போட்டி
நாளை தொடங்கவுள்ள உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டி, 60 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ள அல் பேத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் கத்தார் அணியை எதிர்த்து ஈக்வேடார் அணியை விளையாடுகிறது. கால்பந்து உலகக்கோப்பையை நேரில் காண்பதற்காக ஏராளமான நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

பிடிஎஸ் குழு
இதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்கவுள்ள நிலையில், கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக உலகப்புகழ் பெற்ற பிடிஎஸ் இசைக் குழு பல்வேறு பாடல்களை பாட உள்ளது. அந்த குழுவின் 7 பேர் கொண்ட ஆடவர் குழு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கலை நிகழ்ச்சியில் இந்திய நடிகை
அதேபோல் 2010ம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பைக்கான பாடலை பாடிய ஷகிரா கலை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அதேபோல் ராபி வில்லியம்ஸ் மற்றும் இந்திய நடிகையான நோரா ஃபடேஹி ஆகியோரும் நடனமாட உள்ளனர். சர்வதேச பிரபலங்கள் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த உலகக்கோப்பைத் தொடரில் பிரிட்டன் பாப் பாடலர் வில்லியம்ஸ் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டார்.

கத்தார் செய்த ஆச்சரியம்
குறைந்த மக்கள் தொகையை கொண்ட கத்தார், உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக 220 பில்லியன் டாலர் செலவு செய்து 8 கால்பந்து மைதானங்கள், புதிய விமான நிலையம், மெட்ரோ ரயில், நெடுஞ்சாலை, நட்சத்திர விடுதிகள் என கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து நாடுகளும் ஆச்சரியப்படும் அளவிற்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications













