
யூரோ கோப்பை கால்பந்து போட்டிகளை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் நடத்துகின்றன. காலிறுதிப் போட்டியில் ஜெர்மன் மற்றும் செக் குடியரசு நாடுகள் ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் பி பிரிவு போட்டிகளில் நெதர்லாந்தும் போர்ச்சுகலும் மோதின. இந்தப் போட்டியில் போர்ச்சுகல் அணி அபாரமாக ஆடியது. அந்த அணியின் அனல் ஆட்டக்காரரான ரொனாலடோ 2 கோல்களை அடித்தார். ஆனால் இதனை நெதர்லாந்தால் சமன் செய்ய முடியவில்லை.
ஆட்டத்தின் இறுதியில் 2-1 என்ற கணக்கில் போர்ச்சுகல் வென்று காலிறுதிக்குப் போய் உள்ளது. ஏற்கெனவே கால் இறுதிக்குத் தகுதி பெற்றுள்ள செக் குடியரசு அணியை போர்ச்சுகல் எதிர்கொள்ள இருக்கிறது.