லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணிக்காக விளையாடும் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை சுமார் ரூ. 619 கோடி கொடுத்து வாங்கப் போவதாக ரியல் மாட்ரிட் அணி தெரிவித்துள்ளது.போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர். கடந்த 2003ம் ஆண்டு முதல் இங்கிலாந்தை சேர்ந்த கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார். இதற்காக அவர் கிடைத்த தொகை சுமார் ரூ. 57 கோடி. இந்நிலையில் கடந்த 2008ல் அவர் மான்செஸ்டர் அணியில் இருந்து விலகி கொள்வதாக அணி நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.ஆனால், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர் அலெக்ஸ் பெர்குசன் கேட்டுக் கொண்டதை அடுத்து அவர் தொடர்ந்து அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது மான்செஸ்டர் அணி கிறிஸ்டியானோ ரொனால்டோவை அவரது சொந்த விருப்பத்துக்கு ஏற்ப வேறு அணிக்கு மாற அனுமதித்துள்ளது.ஆறு ஆண்டுகளுக்கு முன் ரூ. 57 கோடிக்கு வாங்கிய ரொனால்டோவை தற்போது சுமார் ரூ. 619 கோடிக்கு விற்கப் போவது மான்செஸ்டர் அணி தான். இதனால் அவர்களுக்கு கொள்ளை லாபம் கிடைக்கும்.இது மான்செஸ்டர் யுனெடெட் அணியின் இணையதளம் வெளியிட்டு செய்தியில்,ரொனால்டோவை சுமார் ரூ. 619 கோடி கொடுத்து ரியல் மாட்ரிட் வாங்க முன் வந்துள்ளது. அவர் ஏற்கனவே அணியில் இருந்து விலக வேண்டும் என கூறி வருவதால் வீரர்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து இம்முடிவை எடுத்தோம். இதையடுத்து ரொனால்டோவுடன் பேச ரியல் மாட்ரிட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இது தொடர்பான இறுதி அறிக்கை வரும் 30ம் தேதி வெளிடப்படும் என்றார்.