சண்டிகர்: பஞ்சாப் தங்க கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதிய போட்டி 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.இப்போட்டியில் இந்தியாதான் வென்றிருக்க வேண்டும். ஆனால் இந்திய வீரர்கள் செய்த கடைசி நேரத் தவறால் நெதர்லாந்து போட்டியை டிரா செய்து விட்டது.சண்டிகரில் பஞ்சாப் தங்க கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. முதல் லீக் போட்டியில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது.நேற்று இரண்டாவது போட்டியில் இந்திய அணி, வலிமை மிக்க நெதர்லாந்தை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்தியா ஆட்ட நேரம் முடிய சிறிது நேரத்திற்கு முன்பு வரை 3-2 என்ற கணக்கில் வெற்றி பெறும் தருவாயில் இருந்தது.ஆனால், 2வது பாதி ஆட்டத்தின்போது இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. ஆனால் அதை கோலாக்க தவறினார் இந்திய கேப்டன் சந்தீப் சிங்.இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட நெதர்லாநது வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடி கடைசி நேரத்தில் இரு கோல்களடித்து 4-4 என்ற கோல் கணக்கில் போட்டியை டிராவில் முடித்து விட்டனர்.இந்தியா சார்பில் சிவேந்திரா சிங் 2 கோல் அடித்தார். பிரபோத் சிங், எஸ்.வி. சுனில் தலா ஒரு கோல் அடித்தனர்.மற்றொரு போட்டியில் நியூசிலாந்து 2-2 என ஜெர்மனியை டிரா செய்தது.