
யூரோ கோப்பை கால்பந்து தொடரை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் நடத்துகின்றன. கடந்த 8-ந் தேதி தொடங்கிய யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.
லீக் போட்டிகளின் முடிவில் செக்குடியரசு, கிரீஸ், ஜெர்மனி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய 8 நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.
கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கியது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடித்த செக்குடியரசு- பி பிரிவில் 2-வது இடத்தை பிடித்த போர்ச்சுக்கல் அணிகள் மோதின
ஆட்டத்தின் முதல்பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதியின் போர்ச்சுகலின் கேப்டனுன் அதிரடி ஆட்டக்காரருமான ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். ஆனால் செக் குடியரசால் ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது..