
கொண்டாட்டம்
ஒரு பக்கம் அர்ஜென்டினா வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள், இன்னொரு பக்கம் கிலியன் எம்பாப்பேயின் திறமையை எண்ணி வியக்கிறார்கள். ஒரு கால்பந்து போட்டியால் மக்களுக்கு என்ன உணர்வை கொடுக்க முடியும் என்று இறுதிப்போட்டி மூலம் ஃபிஃபா நிரூபித்துள்ளது. எதற்காக ஐரோப்பாவும், தென் அமெரிக்காவும் கால்பந்தை வாழ்க்கையாகவும், கலாச்சாரமாகவும் கொண்டாடுகிறார்கள் என்பது இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கு புரிந்துள்ளது.

எம்பாப்பேவுக்கு ஆறுதல்
நேற்றைய ஆட்டம் முடிவடைந்த பின் கிலியன் எம்பாப்பேவுக்கு ஏராளமான மக்கள் ஆறுதல் தெரிவித்தனர். ஏன் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் நேரடியாக ஆறுதல் கூறினார். சமூக வலைதளங்களில் கிலியன் எம்பாப்பேவுக்கு ஏராளமான நாடுகளின் ஆறுதல் பதிவுகள் பறந்து வந்துகொண்டே இருக்கிறது.

எம்பாப்பே ட்வீட்
இந்த நிலையில் உலகக்கோப்பைத் தொடரில் அர்ஜென்டினா அணியிடம் அடைந்த தோல்வி குறித்து கிலியன் எம்பாப்பே ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், உலகக்கோப்பைத் தொடரில் 8 கோல்கள் அடித்து கோல்டன் பூட் விருதை வென்ற கிலியன் எம்பாப்பே, உலகக்கோப்பை அருகில் நின்றிருக்கிறார். இந்த புகைப்படத்தை பகிர்ந்து, திரும்ப வருவோம் என்று ரசிகர்களுக்கு ஒற்றை வார்த்தையில் உற்சாகம் ஏற்படுத்தியுள்ளார்.

சாம்பியன் சாபம்
2018ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரை வென்ற பிரான்ஸ் அணி, இம்முறை சாம்பியன் சாபத்தால் குரூப் சுற்றோடு வெளியேறும் என்று பலரும் கணித்தனர். ஆனால் அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கும் வகையில் பென்சிமா, போக்பா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே, இறுதிப்போட்டிக்கு பிரான்ஸ் அணி முன்னேறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications













