
ஆரம்பே சறுக்கல்
இந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவின் மோசமான சரிவுக்கு காரணம்தான் என்ன. இந்த உலகக் கோப்பையில் டி பிரிவில் இருந்த அர்ஜென்டினாவின் நிலைமை மோசமாக இருந்தது. முதல் ஆட்டத்திலேயே அறிமுக அணியான ஐஸ்லாந்துடன் 1-1 என டிரா செய்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து விலகுவதற்குள் குரேஷியாவிடம் 3-0 என படுதோல்வி அடைந்தது. பிரிவு சுற்றிலேயே வெளியேறும் என்று நினைத்த நிலையில் கடைசியில் நைஜீரியாவை 2-1 என வென்றது.

மெஸ்ஸி அணியானது
லியோனல் மெஸ்ஸி என்பவர் உலகின் தலைச் சிறந்த வீரர்தான். அவருடைய சாதனைகளை சாதாரணமாக எடைபோட முடியாது. ஆனால், மெஸ்ஸி என்ற தனிநபரை நம்பியே அணி இருப்பதுதான், அர்ஜென்டினாவின் தோல்விக்கு முக்கிய காரணம். மற்ற வீரர்கள் ஒருங்கிணைந்து, மெஸ்ஸிக்கு ஆதரவு கொடுத்து அணியாக விளையாடாததே தோல்விக்கான முக்கிய காரணம்.

கோட்டை விட்டது
இன்றைய ஆட்டத்தில் முக்கியமான விஷயத்தை பிரான்ஸ் கெட்டியாக பிடித்துக் கொண்டது. ஆட்டத்தின் முதல் கோலை அர்ஜென்டினா அடித்தது. அதை பிரான்ஸ் சமன் செய்தது. அதேபோல் போல் அர்ஜென்டினா இரண்டாவது கோலை அடிக்க பிரான்ஸ் அதையும் சமன் செய்தது. இந்த நேரத்தில் தான், தங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கையுடன் பிரான்ஸ் நடுகள வீரர்கள் விளையாடினர். ஆனால், அதை அர்ஜென்டினா செய்யத் தவறியது. அதைப் பயன்படுத்தி கடைசியில் தொடர்ந்து கோல்களை பிரான்ஸ் அடித்தது. ஆட்டத்தின் கடைசி நேரத்தில் சுதாரித்த அர்ஜென்டினா, அதை முன்பே செய்திருந்தால், தோல்வியில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம்.

மாப்பே, போக்பா அசத்தல்
இன்றைய ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்து இரண்டாவது பீலேவானார் பிரான்சின் மாப்பே. அதே நேரத்தில் மிகச் சிறந்த நடுகள வீரான போக்பா உள்ளிட்டோர் பந்தை தங்களிடம் வைத்திருந்தது, பாஸ் செய்து கடத்திச் சென்றது ஆகியவை டாப் கிளாஸ். அவர்களுடைய ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அர்ஜென்டினா திணறியது. இதுவும் அணியின் தோல்விக்கு ஒரு காரணமாகும்.
இதுவரை 430க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடியுள்ள அர்ஜென்டினா ஒரு ஆட்டத்தில் 3 கோல்கள் அடித்தும் தோல்வியடைந்தது இதுவே முதல் முறையாகும். அதற்கு காரணம் அவர்கள் செய்த தவறுகளே.


Click it and Unblock the Notifications













