கோவில்பட்டி: தேசிய அளவிலான ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெறுகிறது
இதில் நாடு முழுவதும் பல்வேறு ஹாக்கி அணிகள் பங்கேற்றன. தற்போது இந்த தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
கோவில்பட்டியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியை தமிழக மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
இந்த தொடரில் தமிழக அணி, காலிறுதி வரை முன்னேறியது. காலிறுதியில் ஹரியானாவுடன் மோதின தமிழக அணி 7க்கு3 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறியது.டெல்லி அணியை 9க்கு0 என்ற கோல் கணக்கில் உத்தரப்பிரதேச அணி வீழ்த்தியது. பிஹார் அணியை 4க்கு1 என்ற கணக்கில் ஓடிசா அணி வீழ்த்தியது.
இந்த நிலையில் அரையிறுதி ஆட்டம் மின் விளக்குகள் வெளிச்சத்தில் நடைபெற்றது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஓடிசாவும், சந்திகாரும் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடிக்க, சூட் அவுட் முறையில், 3க்கு0 என்ற கணக்கில் சந்திகார் அணி வென்றது.
இதே போன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் உத்தரப்பிரதேச அணியும், ஹரியானா அணியும் மோதின. இதன் மூலம் 8க்கு3 என்ற கோல் கணக்கில் உ.பி. அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் உ.பி. அணியும், சந்திகார் அணியும் மோத உள்ளன.