ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் சூப்பர் 4 இறுதி சுற்று ஆட்டத்தில் சீனாவை 7 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. போட்டியின் தொடக்கத்தில் இருந்து இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். முதல் கோல் இந்தியாவின் முன்னணி வீரர் ஷிலானந்த் லக்ராவால் நான்காவது நிமிடத்தில் அடிக்கப்பட்டது.
ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி தில்பிரீத் சிங் கோலாக மாற்றினார். இதனை தொடர்ந்து கோல் மழை பொழிந்தது. மந்தீப் சிங், ராஜ் குமால் பால், சுக்ஜீத் சிங் மற்றும் அபிஷேக் இரண்டு முறை கோல் அடிக்க இந்திய அணி 7-0 என்ற பெரிய வெற்றியை பதிவு செய்தனர்.

இது சீனாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய தோல்வியாக இருந்தது. இதன் மூலம், அவர்கள் இறுதிப் போட்டிக்கு பதிலாக மூன்றாவது இடத்திற்கான பிளேஆஃப் போட்டியில் விளையாட வேண்டியிருக்கும். இதன் மூலம் இறுதிப் போட்டியில் இந்தியா, தென் கொரியா மோதும். இதில் வெற்றி பெறும் அணி,அடுத்த ஆண்டு உலகக் கோப்பைக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் இந்திய முன்னணி வீரர்கள் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் சிரமப்பட்டனர். இந்த தொடரில் மட்டுமல்ல, புரோ லீக்கிலும், அபிஷேக் தவிர, முன்னணி வீரர்கள் பெரிதும் தடுமாறினர். சனிக்கிழமை சீனாவுக்கு எதிராக, இந்தியாவின் அனைத்து முன்னணி வீரர்களும் கோல் அடித்து பார்ம்க்கு திரும்பினர்.
இந்தியா ஞாயிற்றுக்கிழமை ஆசிய கோப்பைக்கான இறுதிப் போட்டியில் தென் கொரியாவை எதிர்கொள்ளும். இந்த தொடரில் இந்தியா ஒரே ஒரு முறை மட்டுமே புள்ளிகளை இழந்தது. அது தென் கொரியாவுக்கு எதிராக 2-2 என்ற டிராவில் முடிவடைந்தது.