அரையிறுதி
அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், 6 முறை சாம்பியனான ஜெர்மனியும் மோதின.போட்டி தொடங்கியதில் இருந்தே ஜெர்மனி வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்தியாவை திணறடித்தனர். ஆட்டத்தின் முதல் 25 நிமிடத்திலேயே ஜெர்மனி அணி அடுத்தடுத்து 4 கோல் அடித்து 4க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
முதல் கோல்
ஆனால், இந்தியா 25வது நிமிடத்தில் தான் முதல் கோலே அடித்தது.இதன் பின்னர் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பையும் இந்திய அணியின் துணை கேப்டன் சஞ்சய் குமார் தவறவிட்டார். ஆனால், இதன் பின்னர் ஜெர்மனியை கோல் அடிக்கவிடாமல் இந்தியா பார்த்து கொண்டது.
தோல்வி
ஆனால் அதற்குள் ஆட்டம் கையை நழுவி போய்விட்டது. இதனையடுத்து ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் இந்தியா 2வது கோல் அடிக்க, ஜெர்மனி 4க்கு2 என்ற கணக்கில் வென்றது. இதனையடுத்து இந்தியா 3வது இடத்திற்கான ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இறுதிப் போட்டி
இதே போன்று மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியும், அர்ஜென்டினா அணியும் மோதின. இதில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டி சூட் அவுட் முறையில் 3க்கு1 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி வென்றது. இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியும், ஜெர்மனி அணியும் மோதுகின்றன