
பெல்ஜியத்திடம் பரிதாப தோல்வி
ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டது.

இங்கிலாந்துடன் மோதல்
நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது.

26வது நிமிடத்தில் இங்கிலாந்து கோல்
ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணிக்கு 26-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை டிக்சன் கோலாக்கினார்.

அசத்திய தரம்வீர் சிங்
அதன்பின்னர் இந்திய வீரர் தரம்வீர் சிங் 30-வது நிமிடத்தில் அசத்தல் கோல் அடிக்க, முதல் பாதியில் 1-1 என ஆட்டம் சமநிலையில் இருந்தது.

விறுவிறு இரண்டாம் பகுதி
இதனால் இரண்டாவது பாதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இரு தரப்பினரும் கோல் அடிக்க கடுமையாகப் போராடினர்.

69வது நிமிடத்தில் கோல் அடித்த இங்கிலாந்து
கடைசிவரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் இங்கிலாந்து வீரர் மேன்டெல் ஒரு கோல் அடித்தார்.

மீண்டும் தோல்வி
இதனால், இந்திய அணி 1-2 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்தது. இந்தியா எதிர்கொண்ட 2 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











