முதல் போட்டி
6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் கொரியாவிடம் வெற்றிக்கு அருகில் சென்று சமன் செய்தது. அதன்பின்னர் புத்துணர்ச்சியுடன் வங்கதேசத்தை எதிர்கொண்டு 9 - 0 என யாரும் எதிர்பார்க்காத அபார வெற்றியை பெற்றது.
பழிவாங்கும் ஆட்டம்
இந்நிலையில் இன்று மிக முக்கிய போட்டியாக பாகிஸ்தானை எதிர்கொண்டு இந்தியா விளையாடியது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் கால்பகுதியில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஹர்மன் ப்ரீத் சிங் சாதூர்யமாக பயன்படுத்தினார். இதனால் இந்திய அணி 1 - 0 என முன்னிலை பெற்றது.
மீண்ட பாகிஸ்தான்
அதன்பின்னர் இரண்டாம் கால்பகுதியில் பாகிஸ்தான் அணியும் அட்டாக்கிங் கேம்மை தொடங்கியதால், இரு அணியின் வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆனால் நீண்ட நேரம் பாகிஸ்தான் அணியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 3வது கால்பகுதியின் தொடங்கியவுடனேயே இந்திய அணி கோல் அடித்து 2 - 0 என முன்னிலை பெற்றது.
அபார வெற்றி
இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்க பாகிஸ்தான் திடீரென கோல் அடித்து முன்னேற்றம் கண்டது. ஆனால் அதற்கும் முடிவு கட்டினார் ஹர்மன் ப்ரீத் சிங். கடைசி நேரத்தில் அவர் அடித்த கோலால் இந்தியாவின் வெற்றி உறுதியானது. 3 -1 என அபார வெற்றியையும் பதிவு செய்தது.