ஈபோ: ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் அரை இறுதிப் போட்டியில் மலேசியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
மலேசியாவின் ஈபோ நகரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியா அணி, 2-1 பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை 42 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் இழந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் தென் கொரியாவும், இந்தியாவும் மோதுகின்றன.