விசாகப்பட்டினம்: புரோ கபடி லீக் சீசன் 12-இல் தனது முதல் புள்ளிகளை, பாட்னா பைரேட்ஸ் அணி பெற்றுள்ளது. திங்கட்கிழமை விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த புனேரி பல்டானை 48-37 என்ற கணக்கில் அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் இளம் ரெய்டர் அயன் லோஹ்சாப் 21 புள்ளிகளைப் பெற்று, மூன்று தோல்விகளுக்குப் பிறகு தனது அணிக்கு முதல் வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
இந்த ஆட்டம் பாட்னா பைரேட்ஸுக்கு சிறப்பாகத் தொடங்கியது. அவர்களின் நட்சத்திர ரெய்டர் தலைமையில், குர்தீப், விஷால் பரத்வாஜ் மற்றும் ஆதித்யா ஷிண்டே ஆகியோரை வீழ்த்திய ஒரு சூப்பர் ரெய்டுடன் ஆட்டத்தைத் தொடங்கியது.

பின்னர், அயன் கவுரவ் கத்ரியையும் வீழ்த்தினார். அஸ்லாம் இனாம்தார் மற்றும் அபினேஷ் நடராஜனின் தோல்வியடைந்த ரெய்டுகளுடன், புனேரி பல்டானுக்கு முதல் ஆல் அவுட்டை ஏற்பட்டது. முதல் பாதியின் முதல் டைம்-அவுட்டில் ஸ்கோர் 15-4 என இருந்தது. முதல் 20 நிமிடங்களின் பாட்னா பைரேட்ஸ் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது.
கேப்டன் அன்கித், பங்கஜ் மோஹிதேவை வெற்றிகரமாக டேக்கிள் செய்தனர். பின்னர் தீபக் ஆதித்யா ஷிண்டேவை வீழ்த்தினார், இதனால் புனேரி பல்டானுக்கு இரண்டாவது ஆல் அவுட் நெருங்கியது.தீபக் இம்முறை பல்டானின் கவுரவை டேக்கிள் செய்தபோது இரண்டாவது ஆல் அவுட் ஏற்பட்டது.இதனால் எதிரணியின் மீதான ஆதிக்கம் தொடர்ந்தது. அயன், அஸ்லாமை மீண்டும் டேக்கிள் செய்து தனது சூப்பர் 10-ஐ முடித்தார்.
முதல் பாதியை 13 புள்ளிகளுடன் முடித்தார். ஸ்கோர் 27-10 என இருந்தது. இரண்டாம் பாதியின் தொடக்கத்தில், அயன் மேலும் இரண்டு புள்ளிகளைப் பெற்று அஸ்லாம் மற்றும் மிலாத் மொஹாஜரை வீழ்த்தியதால் மூன்றாவது ஆல் அவுட் விரைவாக வந்தது. இது புனேரி பல்டானை பல மாற்றங்களைச் செய்ய வைத்தது, ஆனால் சீசன் 10 சாம்பியன்களின் தலைவிதியை இது மாற்றவில்லை. இறுதியில் பாட்னா பைரேட்ஸ் அணி 11 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது.