சென்னை : தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு மட்டுமல்ல கபடியும் பல பாரம்பரியமும், நம் உடலோடு கலந்து ஒரு விளையாட்டாக இருக்கிறது. இந்தியாவில் கபடிக்கு தமிழகம் ஒரு பவர் ஹவுஸ் என்று கூட சொல்லலாம். ஆனால் இந்த புரோ கபடி தொடரில், தமிழ்நாட்டை மையமாக வைத்து களமிறங்கியுள்ள தமிழ் தலைவாஸ் அணி ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை.
எனினும் இந்த தொடரில் தமிழக வீரர்கள் பல அணிகளுக்காக விளையாடி வருகிறார்கள். இந்த நிலையில், இந்த தொடரில் அதிக பிள்ளிகளை பெற்று டாப் 5 இடங்களை பிடித்துள்ள தமிழக விரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். முதல் இடத்தில் Patna Pirates அணி வீரர் சுதாகர் 13 போட்டியில் 73 புள்ளிகளை குவித்துள்ளார்.

இவர் கடைசியாக விளையாடிய போட்டியில் காயம் ஏற்பட்டதால் தற்போது ஓய்வில் உள்ளார்.இரண்டாம் இடத்தில் Jaipur அணி வீரர் கரூர் அஜித் 13 போட்டியில் விளையாடி 62 புள்ளிகள் குவித்துள்ளார்... ஆரம்ப கட்ட போட்டியில் சிறப்பாக விளையாடிய அஜித் தற்போது சிறு தடுமாற்றத்தில் உள்ளார்
மூன்றாம் இடத்தில் Telugu Titans அணி வீரர் சஞ்சீவி 14 போட்டியில் விளையாடி 39 புள்ளிகள் குவித்துள்ளார், ஆரம்ப கட்டத்தில் Substituteஆக இருந்த இவர் இப்போது அணியின் Main 7ல் களமிறங்கி பல புள்ளிகளை குவிக்கிறார்
நான்காம் இடத்தில் Haryana அணி வீரர் போஸ்டல் ரஞ்சித் வெறும் 4 போட்டியில் மட்டுமே விளையாடி 31 புள்ளிகளை குவித்துள்ளார்... ஆரம்ப கட்ட போட்டியில் ஓய்வில் இருந்து பிறகு சிறப்பாக விளையாடி மீண்டும் காயம் ஏற்பட்டதால் ஓய்வில் உள்ளார்
ஐந்தாம் இடத்தில் U Mumba அணி வீரர் விஸ்வந்த் 14 போட்டியில் 25 புள்ளிகள் பெற்றுள்ளார்.. ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய விஸ்வந்த் தற்போது தடுமாறி வருவது ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.