மும்பை: புரோ கபடி லீக் 5வது சீசன் முடிந்துள்ள நிலையில், 6வது சீசன் இந்தாண்டு அக்டோபர் 19ம் தேதி துவங்க உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புரோ கபடி லீக் 5வது சீசன் கடந்த ஆண்டு செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நடந்தது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற அந்த சீசனில், 13 வாரங்களில், 138 போட்டிகள் நாடு முழுவதும் நடந்தது. இதில் பைனில் குஜராத் பார்ச்சூன் ஜயன்ட்ஸ் அணியை வென்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது பட்னா பைரேட்ஸ் அணி.