புனே : 2019 புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பல்தான் - குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் புனேரி அணி 10 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
புனேவில் புரோ கபடி லீக்கின் ஒரு பகுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் புனேரி பல்தான் - குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியின் முதல் பாதியில் எந்த தாக்கமும் இன்றி வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது குஜராத் அணி. முதல் பாதியில் கலக்கி எடுத்த புனேரி அணி முதல் பாதி முடிவில் 24 - 10 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாம் பாதியில் வேகம் எடுத்தது குஜராத் அணி. அந்த அணியின் டான்வார் ரெய்டுகளில் அசத்தினார். சூப்பர் 10 ரெய்டு புள்ளிகள் எடுத்தாலும், முதல் பாதியின் வீழ்ச்சியில் இருந்து குஜராத் அணியால் மீள முடியவில்லை.
சச்சின் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சூப்பர் 10 எடுத்தார் என்பதை தவிர வேறு எந்த நன்மையும் அந்த அணிக்கு கிடைக்கவில்லை. போட்டி முடிவில் புனேரி பல்தான் அணி 43 - 33 என்ற புள்ளிக் கணக்கில், அபார வெற்றி பெற்றது. புனேரி அணியின் நிதின் டோமர் 10 புள்ளிகளை எடுத்தார். மன்ஜீத் சிங் 7 புள்ளிகள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். புனேரி பல்தான் அணி தன் சொந்த மண்ணில் முதல் போட்டியில் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது.