சென்னை : 2023 புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணியில் ஆடி வரும் தமிழக வீரர் அபிஷேக் நமது ஹௌசாட் (OneIndia Howzat) யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது தனது குடும்ப பின்னணி குறித்து கூறிய அவர், தன் தந்தை டீக்கடை வைத்து இருப்பதாக கூறினார். தமிழ் தலைவாஸ் அணியில் டிஃபண்டராக இருக்கும் அபிஷேக் பல முறை தனி ஆளாக எதிரணி ரெய்டரை பிடிக்க முயற்சி செய்வார். அவரின் அடையாளமே அது தான் என்றாகி விட்டது.

அது குறித்து பேசுகையில், ஒரு ரெய்டரை அடிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டால் இறங்கி அடிக்க வேண்டும். யோசித்தால் வேலைக்கே ஆகாது என்றார். அப்படி செய்யும் போது சில முறை நமக்கு வெற்றி கிடைக்கும். சில சமயம் கிடைக்காது என்றார்.
தனது தந்தையே அது குறித்து தன்னை விமர்சனம் செய்வார் என்றும் கூறினார் அபிஷேக். இரண்டு மேட்ச் தன் ஆட்டம் சரியில்லை என்றால் தொலைபேசியில் அழைத்து, "என்ன ஆடுகிறாய்?" என தன்னை திட்டுவார் என்று கலகலவென பேசினார் அபிஷேக். அவரது முழு பேட்டியை இங்கே காணலாம்.