For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடிகளை அள்ளிய வீரர்கள்.... விறுவிறுப்பாக நடந்த ஏலம்.... சாதனைகளை படைத்த புரோ கபடி லீக்!

புரோ கபடி லீக் சீசன் 6க்கான வீரர்கள் ஏலம் முடிவடைந்தது. இதில், 6 வீரர்கள் ரூ. 1 கோடிக்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டனர். பல வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

மும்பை: புரோ கபடி லீக் ஆறாவது சீசனுக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் முடிவுக்கு வந்தது. இதில் 5 இந்தியர்கள் உள்பட 6 பேர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டனர். இரண்டாவது நாளில் பிரஷாந்த் குமார் ராய் அதிகபட்சமாக ரூ.79 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

புரோ கபடி லீக் ஆறாவது சீசன் அக்டோபர் 19ம் தேதி துவங்க உள்ளது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் சீசன் 6-க்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் மும்பையில் நேற்று துவங்கியது.

5வது சீசனில் விளையாடிய வீரர்களில், 21 பேரை, 9 அணிகள் தக்க வைத்துள்ளன. முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உரிமையாளராக உள்ள தமிழ் தலைவாஸ் அணி, கேப்டன் அஜய் தாக்குர், அமித் ஹூடா, சி அருண் ஆகிய மூன்று வீரர்களை தக்க வைத்துள்ளது.

58 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 422 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். முதல் நாளான நேற்று, ஐந்து இந்தியர்கள் உள்பட 6 வீரர்கள், தலா ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டனர்.

மோனுதான் டாப்

புரோ கபடி லீக் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இதில் மோனு கோயத்தை மிகவும் அதிகபட்சமாக ரூ.1.51 கோடிக்கு ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி ஏலம் எடுத்தது. ராகுல் சவுத்ரியை தெலுகு டைடன்ஸ் அணி ரூ.1.28 கோடிக்கும், நிதின் தோமரை புனேரி பல்தான் அணி ரூ.1.15 கோடிக்கும் ஏலம் எடுத்தன.

கோடியில் ஏலம்

கோடியில் ஏலம்

புனேரி பல்தான் அணியின் முன்னாள் கேப்டனான ஹூடாவை பட்னா பைரேட்ஸ் அணி ரூ.1.15 கோடிக்கு ஏலம் எடுத்தது. ரிஷாங்க் தேவாடிகாவை, ரூ.1.11 கோடிக்கு யுபி யோத்தா அணி தக்க வைத்தது.

முதல் வீரர்

முதல் வீரர்

ஈரானைச் சேர்ந்த பசல் அட்ராசலிதான் புரோ கபடி லீக்கில் ரூ.1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட முதல் வீரராவார். சிறந்த தடுப்பாட்டக்காரரான அவருக்கு ரூ.20 லட்சம் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டது. யு மும்பா அணி ரூ.1 கோடிக்கு அவரை ஏலம் எடுத்தது.

ஏலம் முடிந்தது

ஏலம் முடிந்தது

இந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் ஏலம் நடந்து முடிந்தது. இதில், இதில் பிரஷாந்த் குமார் ராய் அதிகபட்சமாக ரூ.79 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவரை யுபி யோத்தா அணி ஏலம் எடுத்தது. அவருக்கு அடுத்தபடியாக சந்திரன் ரஞ்சித், ரூ.61.25 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

Story first published: Friday, June 1, 2018, 13:36 [IST]
Other articles published on Jun 1, 2018
English summary
Players auction for the pro kabaddi league ended
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X