லூதியானா: உலகக் கோப்பை ஆண்கள் கபடிப் போட்டியில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தி இந்தியா கோப்பையை தக்க வைத்தது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 3-வது கபடி உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின.
இந்திய அணி வீரர்கள் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாகிஸ்தானால் இந்திய அணியை எதிர்கொள்ள முடியாமால் மிகவும் தடுமாறியது.
ஆட்டத்தின் முடிவில் 59-22 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சுக்பீர் சர்வான் தலைமையிலான இந்திய அணிக்கு முதல் பரிசாக ரூ2 கோடி வழங்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு ரூ1 கோடியும் 3-வது இடம் பிடித்த கனடா அணிக்கு ரூ51 லட்சமும் வழங்கப்பட்டது