12வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள்- கவுகாத்தி, ஷில்லாங்கில் ஜனவரியில் துவக்கம்
ஷில்லாங்: கவுகாத்தி மற்றும் ஷில்லாங்கில் 12 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் வருகின்ற ஜனவரியில் கோலகலமாக துவங்கி நடைபெற உள்ளன.
12 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டி இந்தியாவில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தி மற்றும் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கிலும், ஜனவரி 10 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடக்கிறது.

ஷில்லாங்கில் 7 போட்டிகளும், கவுகாத்தியில் 13 போட்டிகளும் நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த 2,500 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை அதாவது 2010 ஆம் ஆண்டில் இந்த போட்டி வங்காளதேசத்தின் டாக்கா நகரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Story first published: Thursday, September 10, 2015, 9:44 [IST]
Other articles published on Sep 10, 2015


Click it and Unblock the Notifications