கொல்கத்தா: பிரச்சினைக்குரிய கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் உலகக் கோப்பைப் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்தலாம் என ஐசிசி அனுமதி த்துவிட்டது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4 ஆட்டங்கள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
போட்டிகளையொட்டி புதுப்பிக்கப்பட்ட ஸ்டேடியத்தின் பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவடையாததால் முதல் போட்டியான இந்தியா இங்கிலாந்து மோதும் ஆட்டத்தை கொல்கத்தாவில் இருந்து மாற்றி ஐ.சி.சி உத்தரவிட்டது.
மற்ற 3 ஆட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்காக ஐ.சி.சி. குழுவினர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை ஆய்வு செய்தனர். அவர்களுக்கு பணியில் திருப்தி ஏற்பட்டதையடுத்து கொல்கத்தாவில் 3 ஆட்டங்களை நடத்த ஐ.சி.சி. அனுமதி வழங்கியுள்ளது.