ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஆடவர் தனிநபர் வில்வித்தையில் இந்திய வீரர் அடானு தாஸ் நேபாளம், கியூபா வீரர்களை வீழ்த்தி காலியிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
ரியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் வில்வித்தை தனிநபர் பிரிவில் பங்கேற்றுள்ள அடானு தாஸ், தரநிலை சுற்று போட்டியில் 5வது இடம் பிடித்தார்.
இதையடுத்து நேற்று நடந்த போட்டியில் நேபாளத்தின் ஜிட்பகதூர் முக்தனை எதிர்கொண்டார். இதில் 29-26, 29-24,30-26, என (6-0), நேர் செட் கணக்கில் வென்றார்.
பின்னர் நடந்த அடுத்த சுற்று போட்டியில் கியூபா வீரர் சந்தித்தார் அடானு தாஸ். இந்த போட்டியில் முதல் இரு செட்களை 28-26, 29-26, என கைப்பற்றினார் அடானு தாஸ். அடுத்து நடந்த இரு செட்களை 26-27, 27-28, என இழந்தார்.
இதன் பின்னர் வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் 29-28. என்ற கணக்கில் வீழ்த்தி 6- 4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் காலியிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.