எங்களால் இந்தியாவைப் போல திறமைகளை வீணடிக்க முடியாது-கிரேக் சேப்பல்

இந்திய அணியை நாசப்படுத்தியவர் கிரேக் சேப்பல் என்ற பெயர் உண்டு. இவரது பயிற்சிக்காலத்தில் இந்தியா பெரும் அவலங்களைச் சந்தித்தது. இந்திய கிரிக்கெட் அணிக்குப் பயிற்சி அளிக்க முடியாமல் திரும்பிப் போனவர் சேப்பல்.
இந்த நிலையில், தற்போது இவர் தேவையில்லாமல் இந்தியாவை வம்புக்கிழுத்துள்ளார். மெல்போர்னில் அவர் கூறுகையில், இந்தியாவில் திறமைகளை வீணடிக்க நிறைய சுதந்திரம் உள்ளது. அவர்களிடம் நிறைய வீரர்கள் உள்ளனர். அதில் பல திறமையான வீரர்களுக்கு வாய்ப்பே கொடுக்காமலும் வீணடிப்பார்கள்.
ஆனால் எங்களால் அப்படி செய்ய முடியாது. அப்படி செய்ய எங்களுக்கு அனுமதியும் கிடையாது. திறமையாளர்களை உரிய முறையில் நாங்கள் பயன்படுத்தியாக வேண்டும். திறமைகளை எங்களால் வீணடிக்க முடியாது.
எனவே இருக்கிற வீரர்களை சரியாக பயன்படுத்திக்கொள்ளவே நாங்கள் முயல்வோம். ரிக்கி பான்டிங், மைக்கேல் ஹஸ்ஸி, சிமோன் காடிச் ஆகியோருக்கு ஒரு கட்டம் வந்து விட்டது. இனியும் அவர்களால் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்க முடியாது.
புதிய தலைமுறையிடம் அணியை ஒப்படைக்கும் நேரம் வந்து விட்டது. இது அவர்களுக்கும் புரியும். அவர்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்றார் சேப்பல்.
Story first published: Thursday, June 7, 2012, 11:10 [IST]
Other articles published on Jun 7, 2012


Click it and Unblock the Notifications