மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் இந்திய அணி வீ்ரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். பத்ரிநாத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கர்நாடக பந்து வீச்சாளர் அபிமன்யூ மிதுன், மேற்கு வங்க விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா ஆகியோர் புதிதாக சேர்ந்துள்ளனர்.
சுரேஷ் ரெய்னா, விராத் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ரோஹித் சர்மா, போர்டு பிரசிடென்ட் லெவன் அணியின் கேப்டனாக்கப்பட்டுள்ளார்.
இதைத் தவிர விசேஷம் ஏதும் அணித் தேர்வில் இல்லை.
ராகுல் திராவிட், யுவராஜ் சிங், ஸ்ரீசாந்த் ஆகியோர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் நீக்கப்பட்டு, பத்ரிநாத், சாஹா, மிதுன் ஆகியோருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 6ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது.
இந்திய அணி விவரம்:
டோணி, ஷேவாக், கம்பீர், முரளி விஜய், சச்சின், லட்சுமண், பத்ரிநாத், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, அமீத் மிஸ்ரா, சுதீப் தியாகி, பிரக்யான் ஓஜா, அபிமன்யூ மிதுன், சாஹா.
போர்டு பிரசிடென்ட் லெவன்:
அபினவ் முகுந்த், பார்த்திவ் படேல், அஜிங்க்யா ரஹானே, ரோஹித் சர்மா, மனீஷ் பாண்டே, சட்டேஸ்வர் பூஜாரா, அபிஷேக் நய்யார், பையூஷ் சாவ்லா, ஆர்.அஸ்வின், வினய்குமார், அபிமன்யூ மிதுன், ஷிகார் தவன், உமேஷ் யாதவ், மன்பிரீத் கோனி.