
நாயும் நானும்
மொத்தம் 2 படங்கள் போட்டுள்ளார் புவனேஷ்வர் . முதல் படத்தில் ஒரு புல்வெளியில் அவரும் அவரது நாய்க்குட்டியும் படுத்துள்ளனர். நேருக்கு நேர் படத்தில் விஜய்யும் சூர்யாவும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வது போல இருவரும் படுத்தபடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டுள்ளனர். அப்போது நாய் குட்டியாக உள்ளது. இந்தப் படத்திற்கு அவரது மனைவி நூபுர் நகர் முதல் ஆளாக வந்து மை லவ்ஸ் என்று இருவரையும் செல்லமாக கொஞ்சி கமெண்ட் போட்டுள்ளார்.

பிரமாண்ட வளர்ச்சி
அடுத்த படம் சில வருடங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்டது. அதில் நாய் நன்றாக வளர்ந்து பிரமாண்டமாக காணப்படுகிறது. இப்போது வீட்டில் தரையில் இருவரும் நேருக்கு நேர் பார்த்தபடி படுத்துக் கொண்டுள்ளனர். நாயும், புவனேஷ்வரும் ஏதோ மெளன பாஷையால் தீவிரமாக பேசிக் கொண்டிருப்பது போல இருக்கிறது. அப்படி இருக்கிறது இருவரது பார்வைகளும்.

ரசிகர்கள் கமெண்ட்
இந்த இரு படங்களையும் சேர்த்து ஒரே படமாகவும் போட்டுள்ளார் புவனேஷ்வர். ரசிகர்கள் பலரும் இந்தப் படங்களுக்கு கமெண்ட்டுகளைக் குவித்து வருகின்றனர். சிலர், நாய்க்குத்தான் வயதானது தெரிகிறது. ஆனால் புவி அப்படியே இளமையாக இருக்கிறார் என்றும் கமெண்ட் போட்டுள்ளனர். இந்தப் படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.

மெளன பாஷை
கிரிக்கெட் இல்லை. விளையாட முடியவில்லை. வீட்டுக்குள்ளேயே சுத்தி சுத்தி எல்லோருக்கும் போரடிச்சுப் போயிருசசு. இந்த நிலையில் புவனேஷ்வர் போடடுள்ள இந்தப் புகைப்படத்தில் அவரும் எவ்வளவு போராக உணர்கிறார் என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளார். ஒரு வேளை நம்ம நிலைமை இப்படி வெட்டியாக இருக்க வேண்டியதாப் போச்சேடா என்று நாயுடன் பேசிக் கவலையைப் பகிர்ந்திருப்பாரோ புவி!


Click it and Unblock the Notifications











