சான் மரினோ : மோட்டோ ஜிபி பைக் ரேஸில் ஒரு பைக் ஓட்டுனர், ரேஸுக்கு நடுவில் தன் போட்டியாளரின் பைக் பிரேக்கை அழுத்தியுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சான் மரினோ நகரில் நடைபெற்ற மோட்டோஜிபி ரேஸில் ரோமோனா பெனாட்டி என்ற வீரரும், ஸ்டேபானோ மான்சி என்ற வீரருக்கும் போட்டி நடுவே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
முதலில் அவர்கள் ரேஸில் சென்று கொண்டு இருந்தபோது இடித்தக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் கடுப்பான ரோமோனா பெனாட்டி, அடுத்த சில சுற்றுகள் முடிந்த நிலையில், மான்சி அருகில் சென்றுள்ளார்.
அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக அவரது பைக்கின் முன் பிரேக்கை அழுத்திவிட்டார். ஒரு கணம் தடுமாறிவிட்ட மான்சி பைக்கை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து ரோமோனா பெனாட்டிக்கு இரண்டு ரேஸ் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தான் மனமயக்கத்தில் இப்படி செய்து விட்டதாக கூறி மன்னிப்பு கோரியுள்ளார் ரோமோனா பெனாட்டி.
இப்ப மன்னிப்பு கேட்டு என்னப்பா புண்ணியம்? மான்சிக்கு ஏதாவது நிகழ்ந்திருந்தால்?