டெல்லி : டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் மலையேற்றம், ஸ்கேட்டிங் மற்றும் அலைசறுக்கு உள்ளிட்டவற்றை சேர்க்க ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் வரும் 2024ல் பாரீசில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பிரேக் டான்சையும் சேர்க்க போட்டி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கான விண்ணப்பத்தை ஒலிம்பிக் கமிட்டியிடம் போட்டி ஏற்பாட்டாளர்கள் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏராளமான கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை நகர்ப்புற ரசிகர்களுக்கு ஏற்றாற் போல கூடுதல் கலையம்சங்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் மலையேற்றம், அலைசறுக்கு மற்றும் ஸ்கேட்டிங் ஆகியவற்றை முதல்முறையாக இணைக்கவும் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் வரும் 2024ல் பாரீசில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரில் பிரேக் டான்சை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் ஒலிம்பிக் கமிட்டியிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.