
எய்ட்ஸ் விழிப்புணர்வு
இந்த நிலையில், மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் இந்த வருடம் ஒலிம்பிக் நடக்க உள்ளது. அது சரி.. ஒலிம்பிக் போட்டிகளின் போது, ஏன் வீரர்களுக்கு பாக்கெட் பாக்கெட்டாக காண்டம் கொடுக்கிறார்கள்? என்று சமீபத்தில் பார்த்தோம். அதாவது, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று 1988ல் இருந்து ஒலிம்பிக் போட்டிகளில் காண்டம் வழங்கப்பட்டு வருகிறது என்று பார்த்தோம்.

அதிக உடலுறவு
பொதுவாக, தடகள வீரர்களுக்கு தான் அதிக அளவில் ஆணுறைகள் வழங்கப்படுகின்றன. ஏனெனில், தடகள வீரர்களை போன்ற திடகாத்திரமான ஆட்களுக்கு உடலில் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும் என்பதாலும், உடலுறவில் ஈடுபடுவது மன அழுத்தம் குறைய உதவும் என்பதாலும் இதுப்போன்ற போட்டி காலங்களில் அதிகளவில் இவர்கள் உடலுறவில் ஈடுபட காரணமாக அமைவதாக கூறப்படுகிறது.

மூன்று பெண்களுடன் தினமும்
இந்நிலையில், கடந்த 2000ம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக் தொடரில், அமெரிக்காவைச் சேர்ந்த javelin throw வீரர் Breaux Greer ஒரு நாளைக்கு மூன்று பெண்களும் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார் என்று அவரது சக வீரர் Ryan Lochte தெரிவித்துள்ளார். javelin throw விளையாட்டுப் பிரிவில் கில்லாடியான Breaux, அமெரிக்காவில் எட்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. காண்டம் கையில் அதிகம் ஸ்டாக் இருக்க, ஒலிம்பிக் தொடரில் புகுந்து விளையாடி இருக்கிறார் மனிதர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சிட்னி ஒலிம்பிக் போட்டியில் இருந்து காயம் காரணமாக அவர் வெளியேற நேரிட்டது.
Recommended Video

கடும் கட்டுப்பாடுகள்
உலகை அச்சுறுத்தி வரும் புதுவகை டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸானது ஜப்பான் நாட்டிலும் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, கொரோனா பாதுகாப்பு ஏற்பாடாக அயல்நாட்டு வீரர்கள் அனைவரும் டோக்கியோவிற்கு வருவதற்கு முன்பாக 2 பரிசோதனை மேற்கொண்டு அதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்திருக்க வேண்டும் என ஜப்பான் நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதே போல டெல்டா ப்ளஸ் எனப்படும் புதுவகை கொரோனா பரவி வரும் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளின் வீரர்கள் டோக்கியோவிற்கு கிளம்புவதற்கு 7 நாட்களுக்கு முன்னதாக இருந்து தினந்தோறும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications