For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

8 முறை அமெரிக்க "சாம்பியன்".. தினம் 3 பெண்களுடன் செக்ஸ் - சிட்னி ஒலிம்பிக்கில் நடந்த கூத்து

சிட்னி: கையில் காண்டம் இருக்கிறது என்பதற்கான சிட்னி ஒலிம்பிக் போட்டிகளில் கூத்தடித்து இருக்கிறார் அமெரிக்க சாம்பியன் வீரர் ஒருவர்

வரும் ஜுலை. 23ம் தேதி ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. கொரோனாவிற்கு இடையே இந்த போட்டிகள் நடக்க உள்ள நிலையில் இதற்காக பல்வேறு புதிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

ஜுலை 23 முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை இந்த போட்டிகள் நடக்க உள்ளன. கடந்த 2020ம் ஆண்டே நடக்கவிருந்த ஒலிம்பிக், போட்டிகள் கொரோனா காரணமாக இந்த வருடம் தள்ளி வைக்கப்பட்டது.

 எய்ட்ஸ் விழிப்புணர்வு

எய்ட்ஸ் விழிப்புணர்வு

இந்த நிலையில், மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் இந்த வருடம் ஒலிம்பிக் நடக்க உள்ளது. அது சரி.. ஒலிம்பிக் போட்டிகளின் போது, ஏன் வீரர்களுக்கு பாக்கெட் பாக்கெட்டாக காண்டம் கொடுக்கிறார்கள்? என்று சமீபத்தில் பார்த்தோம். அதாவது, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று 1988ல் இருந்து ஒலிம்பிக் போட்டிகளில் காண்டம் வழங்கப்பட்டு வருகிறது என்று பார்த்தோம்.

 அதிக உடலுறவு

அதிக உடலுறவு

பொதுவாக, தடகள வீரர்களுக்கு தான் அதிக அளவில் ஆணுறைகள் வழங்கப்படுகின்றன. ஏனெனில், தடகள வீரர்களை போன்ற திடகாத்திரமான ஆட்களுக்கு உடலில் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும் என்பதாலும், உடலுறவில் ஈடுபடுவது மன அழுத்தம் குறைய உதவும் என்பதாலும் இதுப்போன்ற போட்டி காலங்களில் அதிகளவில் இவர்கள் உடலுறவில் ஈடுபட காரணமாக அமைவதாக கூறப்படுகிறது.

 மூன்று பெண்களுடன் தினமும்

மூன்று பெண்களுடன் தினமும்

இந்நிலையில், கடந்த 2000ம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக் தொடரில், அமெரிக்காவைச் சேர்ந்த javelin throw வீரர் Breaux Greer ஒரு நாளைக்கு மூன்று பெண்களும் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார் என்று அவரது சக வீரர் Ryan Lochte தெரிவித்துள்ளார். javelin throw விளையாட்டுப் பிரிவில் கில்லாடியான Breaux, அமெரிக்காவில் எட்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. காண்டம் கையில் அதிகம் ஸ்டாக் இருக்க, ஒலிம்பிக் தொடரில் புகுந்து விளையாடி இருக்கிறார் மனிதர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சிட்னி ஒலிம்பிக் போட்டியில் இருந்து காயம் காரணமாக அவர் வெளியேற நேரிட்டது.

Recommended Video

Condom கிடையாது.. ஆனால் மது கிடைக்கும்.. Tokyo Olympics-ல் புதிய கட்டுப்பாடு
 கடும் கட்டுப்பாடுகள்

கடும் கட்டுப்பாடுகள்

உலகை அச்சுறுத்தி வரும் புதுவகை டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸானது ஜப்பான் நாட்டிலும் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, கொரோனா பாதுகாப்பு ஏற்பாடாக அயல்நாட்டு வீரர்கள் அனைவரும் டோக்கியோவிற்கு வருவதற்கு முன்பாக 2 பரிசோதனை மேற்கொண்டு அதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்திருக்க வேண்டும் என ஜப்பான் நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதே போல டெல்டா ப்ளஸ் எனப்படும் புதுவகை கொரோனா பரவி வரும் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளின் வீரர்கள் டோக்கியோவிற்கு கிளம்புவதற்கு 7 நாட்களுக்கு முன்னதாக இருந்து தினந்தோறும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Friday, July 16, 2021, 14:41 [IST]
Other articles published on Jul 16, 2021
English summary
Breaux Greer had sex with three women every day - ஒலிம்பிக்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+