Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாட்டையே உலுக்கிய மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்..பிரிஜ் புஷன் குற்றமற்றவர் என தீர்ப்பு

டெல்லி: மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இருந்து தங்களை விடுவித்து டெல்லி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் வரவேற்றுள்ளார். இந்த நாள் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் ஒரு "மகிழ்ச்சியான நாள்" என்றும், விரிவான தீர்ப்புக்காகக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த அரங்கில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்களின் நாடு தழுவிய போராட்டங்களுக்கும் வழிவகுத்த இந்த முக்கிய வழக்கில், பிரிஜ் பூஷன் சிங் மற்றும் டபிள்யூ.எஃப்.ஐ முன்னாள் உதவிச் செயலாளர் வினோத் தோமர் ஆகியோரை டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

Briji Bhushan

தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் செய்தியாளர்களிடம் பேசிய பிரிஜ் பூஷன் சிங், குற்றச்சாட்டுகள் முதன்முதலில் எழுந்தபோது தான் எடுத்த நிலைப்பாட்டை மீண்டும் உறுதிபடுத்தினார்."முதல் நாளில் எனது முதல் அறிக்கை வந்தபோது, என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நான் தூக்கிலிட்டுக் கொள்வேன் என்று கூறி இருந்தேன்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் டைம் 5 பவுலர்கள்.. ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த ஆர்ஸ்தீப் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் டைம் 5 பவுலர்கள்.. ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த ஆர்ஸ்தீப் சிங்

இன்று நீதிமன்றம் என்னை மரியாதையுடன் விடுவித்துள்ளது. இது எனக்கும் எனது ஆதரவாளர்களுக்கும் மகிழ்ச்சியான விஷயம். இன்று ஒரு மகிழ்ச்சியான நாள்" என்று பிரிஜ் பூஷன் சிங் கூறினார்.தனது சட்டக் குழுவின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், இந்த வழக்கு குறித்து மேலும் கருத்து தெரிவிப்பதற்கு முன் நீதிமன்றத்தின் விரிவான உத்தரவுக்காகக் காத்திருப்பதாகக் கூறினார்.

ரவுஸ் அவென்யூ நீதிமன்றத்தின் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் (ACJM) அஷ்வினி பன்வார் இந்த தீர்ப்பை வழங்கினார், பிரிஜ் பூஷன் சிங் மற்றும் மல்யுத்த சம்மேளன முன்னாள் உதவிச் செயலாளர் வினோத் தோமர் ஆகிய இருவரையும் விடுவித்தார்.

அரசுத் தரப்பு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு ஆகிய இரு தரப்பு இறுதி வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை மூடிய நீதிமன்ற அறையில் நடைபெற்றது.டபிள்யூ.எஃப்.ஐ தலைவராக இருந்த காலத்தில் பிரிஜ் பூஷன் சிங் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆறு பெண் மல்யுத்த வீராங்கனைகள் சுமத்திய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது.

தோனி இல்லை.. இவர் தான் இந்தியாவிலே சிறந்த கிரக்கெட் அறிவை கொண்டவர்.. மோயின் அலி புகழாரம்

Also Read

தோனி இல்லை.. இவர் தான் இந்தியாவிலே சிறந்த கிரக்கெட் அறிவை கொண்டவர்.. மோயின் அலி புகழாரம்

2023 ஆம் ஆண்டில் டெல்லியின் ஜந்தர் மந்தரில் முன்னணி மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டங்கள் மற்றும் புகார்களைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, பின்னர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக 1,500 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

Story first published: Monday, August 3, 2026, 12:44 [IST]
Other articles published on Aug 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+