மும்பை : ஸ்பெயினில் சர்வதேச செஸ் போட்டியில் பங்கேற்பதற்காக சென்ற இந்திய வீரர்களின் பொருட்களை மர்ம கும்பல் ஒன்று திருடி இருக்கும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சன் வே செஸ் தொடர் என்ற போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து 6 செஸ் வீரர்கள் சென்றிருக்கிறார்கள். இந்த செஸ் வீரர்களுக்காக தனியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
