For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செஸ் ஒலிம்பியாட் 2022 - கடினமாகும் சுற்றுகள்..பிரக்ஞானந்தா 4வது சுற்றில் டிரா..இந்திய ஏ அணியும் டிரா

சென்னை: 2022 ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் தொடர் தற்போது கடினமான சுற்றுகளை நோக்கி நகர்ந்து வருகிறது.

ஓபன் பிரிவில் இந்தியாவின் 3 அணிகளும், 100 சதவீதம் வெற்றி பெற்ற நிலையில், 4வது சுற்றில் முதல் தோல்வியை சந்தித்தது.

Chess Olympiad 2022 – Day 4 Results Praggnanandhaa faces first draw

இதில் இந்திய பி அணியில் விளையாடும் பிரக்ஞானந்தா நடப்பு தொடரில் முதல் முறையாக டிராவை சந்தித்துள்ளார்.

இந்திய ஏ அணியில் விளையாடிய 4 போட்டியாளர்களும் டிராவை சந்தித்தனர். பிரான்ஸ் வீரர்களை எதிர்கொண்ட இந்திய ஏ அணியின் ஹரிகிருஷ்ணா, குஜராத்தி, அர்ஜூன், நாராயணன் ஆகிய 4 பேரும் டிராவை சந்தித்துள்ளனர். இதே போன்று இந்திய சி அணியில் ஸ்பெயின் அணியை இந்தியா எதிர்கொண்டது.

இதில் தமிழக வீரர் சேதுராமன் டிராவை கண்டார். இந்த அணியில் விளையாடிய குப்தா ஸ்பெயின் வீரர் ஆண்டன் டேவிட்டிடம் தோல்வியை தழுவினார். மற்ற 2 பேரும் போட்டியை சமன் செய்தனர். இந்திய பி அணி இத்தாலியை எதிர்கொண்டது. இதில் குகேஷ், சரின் ஆகியோர் வெற்றி பெற, பிரக்ஞானந்தா மற்றும் சத்வாணி ஆகியோர் டிராவை கண்டனர்.

4 சுற்று முடிவில் ஓபன் பிரிவில் இந்திய பி அணி 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.அர்மேனியா 2வது இடத்தில் 12.5 புள்ளிகளுடன் உள்ளது. இந்திய ஏ அணி 7வது இடத்திலும், அமெரிக்கா 11வது இடத்திலும் உள்ளது. மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி 4வது இடத்தில் உள்ளது.

Story first published: Wednesday, August 10, 2022, 10:33 [IST]
Other articles published on Aug 10, 2022
English summary
Chess Olympiad 2022 – Day 4 Results Praggnanandhaa faces first draw செஸ் ஒலிம்பியாட் 2022 - கடினமாகும் சுற்றுகள்..பிரக்ஞானந்தா 4வது சுற்றில் டிரா..இந்திய ஏ அணியும் டிரா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+