சென்னை: 2022ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரின் 5வது சுற்றில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
5வது சுற்றில் இந்திய பி அணி, ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. இதில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, சாண்டோசை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு வீரர்களும் அதிரடியாக விளையாடியதால் போட்டியில் அனல் பறந்தது.

பிரக்ஞானந்தாவுக்கு ஸ்பெயின் வீரர் தொடர்ந்து நெருக்கடி அளித்து வந்தார். அதனை பிரக்ஞானந்தா முறியடித்து ஒவ்வொரு முறையும், தனது கிங்கை காப்பாற்றினார். இதனையடுத்து 85வது நகர்த்தலில் , பிரக்ஞானந்தாவுக்கு ஸ்பெயின் வீரர் செக் மேட் வைக்க தோல்வியை பிரக்ஞானந்தா ஒப்பு கொண்டார்.
நடப்பு தொடரில் பிரக்ஞானந்தா பெறும் முதல் தோல்வி இதுவாகும். இந்திய பி அணியில் குகேஷ் மற்றும் அபிதன் வெற்றி பெற, சரின் நிஹல் டிரா செய்தார். ரோமேனியாவை எதிர்கொண்ட இந்திய ஏ அணியில் ஹரி கிருஷ்ணா, குஜராத்தி, நாராயணன் ஆகியோர் தங்களது ஆட்டத்தை டிரா செய்தார்.
அர்ஜூன் மட்டும் வெற்றியை ரூசித்தார். இந்திய சி அணியில் களமிறங்கிய மற்றொரு தமிழக வீரர் சேதுராமன் சிலி வீரர் மோரோவிச்சை வீழ்த்தினார். இதே போன்று அபிமன்யுவும் வெற்றியை ரூசித்தார். 5 சுற்று முடிவில் இந்திய பி அணி முதலிடத்தில் உள்ளது.