டெல்லி : கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டிகளின் போது இந்திய வீரர்கள் ஏற்படுத்திய சேதங்களுக்கான செலவை கேட்டுள்ளது, இந்திய ஒலிம்பிக் சங்கம். இந்திய வீரர்கள் மற்ற நாடுகளில் இது போன்ற சேதங்களை ஏற்படுத்துவது, நமது நாட்டிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் நரிந்தர் பத்ரா அறிவுறுத்தி உள்ளார்.
2018 காமன்வெல்த் போட்டிகள் நடந்த ஆஸ்திரேலியா, வீரர்கள் தங்குவதற்கு என தனி கிராமத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்திய வீரர்கள் தங்கி இருந்த அறைகளில் சேதம் ஏற்படுத்தியதாக கூறி உள்ளது காமன்வெல்த் கேம்ஸ் நிர்வாகம். இதற்காக பல்வேறு சேதங்களை பட்டியலிட்டு மொத்தமாக ₹73,988ஐ இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் கேட்டுள்ளது.
