CWG 2026: இந்தியாவுக்கு பின்னடைவு.. ஊக்குமருந்து விதிமீறலால் பளுதூக்கும் வீரர் வெளியேற்றம்
கிளாஸ்கோ: ஊக்கமருந்து விதிமுறை மீறல்கள் காரணமாக காமன்வெல்த் போட்டிகளுக்கான இந்திய பளுதூக்கல் அணியின் வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பளுதூக்கல் வீரரான தில்பாக் சிங் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்தப் போட்டிகளுக்கான இந்தியாவின் பளுதூக்கல் வீரர்களின் ஒதுக்கீடு 12-லிருந்து 11 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு தலைமையிலான 12 பேர் கொண்ட அணியை முன்னதாக கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில், இந்த ஒதுக்கீடு குறைப்பு குறித்து தங்களுக்கு புதன்கிழமை அன்றுதான் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஜூடோ வீரர் அருண் குமாரும் காமன்வெல்த் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது."ஒதுக்கீடு 12-லிருந்து 11 ஆகக் குறைக்கப்பட்டது பற்றி கூட்டமைப்பிற்கு நேற்றுதான் தெரியவந்தது. தில்பாக் சிங் முதுகுவலியால் அவதிப்பட்டு வருவதாலும், பர்மிங்காமில் நடந்த தகுதி முகாமில் அவர் பயிற்சி பெறாததாலும், அவரை அணியில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது"
காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்னதாக ஊக்கமருந்து தடைகள் விதிக்கப்பட்டதால் என். அஜித் சாய்ராஜ் பர்தேசி மற்றும் ஹர்சரண் சிங் ஆகியோர் போட்டியிலிருந்து விலக்கப்பட்டனர். தகுதிச் சுற்றுக் காலத்தின் போது ஊக்கமருந்து விதிமுறை மீறலில் ஈடுபட்டதாகப் பெண் பளுதூக்கல் வீராங்கனை வன்ஷிதா வர்மாவும் தடை செய்யப்பட்டார்.
ஊக்கமருந்து விதிமீறல்களால் ஏற்கனவே பல்வேறு தடைகளைச் சந்தித்துள்ள இந்தியப் பளுதூக்கல் துறைக்கு, இந்த ஒதுக்கீடு குறைப்பு மற்றொரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த பளுதூக்கல் வீரரான தில்பாக் சிங், இந்தியாவின் ஹெவிவெயிட் பிரிவில் ஒரு முக்கிய வீரராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றதில் இருந்து, தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் முத்திரை பதிக்கும் வரை அவர் விளையாட்டுத் துறையில் வேகமாக வளர்ந்துள்ளார்.
ஜூனியர் பிரிவில், சிறுவர்களுக்கான 96 கிலோ பிரிவில் மொத்தம் 295 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்று தில்பாக் சிங் தனது திறமையை நிரூபித்தார். பின்னர் சீனியர் பிரிவிற்கு முன்னேறிய அவர், தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் புதிய சாதனைகளைப் படைத்து தனது திறனைத் தொடர்ந்து வெளிப்படுத்தினார்.
இந்தியாவின் பதக்கம் வெல்லக் கூடிய முதன்மையான வீரர்களில் ஒருவராக தில்பாக் உருவெடுத்திருந்தார். கடந்த ஓராண்டில், காமன்வெல்த் அளவிலான போட்டிகளில் உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராகப் போட்டியிட்டு பதக்க மேடைகளை அலங்கரித்துள்ளார். இதன் மூலம் கிளாஸ்கோவில் தனது முதல் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் பெற்றார். ஆனால், தற்போது அவரது அந்த வாய்ப்பு பறிபோயுள்ளது.


Click it and Unblock the Notifications

