டெல்லி:டெல்லியில் திட்டமிட்டபடி இந்தியா- பாகிஸ்தான் ஒரு நாள் போட்டி நடைபெறும் என்று டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்அறிவித்துள்ளார்.இந்தியா- பாகிஸ்தான் மோதும் இறுதி ஒரு நாள் போட்டி 17ம் தேதி டெல்லியில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்தப் போட்டியைத்தான் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் பார்க்க வருவதாக அறிவித்துள்ளார்.ஆனால் போட்டிக்கான நாள் நெருங்கிய போதிலும் மைதானத்தில் சீரமைப்புப் பணிகள் இன்னும் முடியவில்லை. இதனால்டெல்லி போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படக் கூடும் என்று கூறப்பட்டது.ஆனால் டெல்லியில் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று அம்மாநில முதல்வர் ஷீலா தீட்சித் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று கூறுகையில், வரும் 17ம் தேதி டெல்லியில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஒரு நாள் கிரிக்கெட்போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இதனால் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும்.பாதுகாப்பு குறித்த எந்தவிதப் பிரச்சினையும் ஏற்படாது என்றார்.